கண்டன அறிக்கை.

ஊடகவியலாளர்மப்ரூக்மீதான #தாக்குதலை ஸ்ரீலங்காமுஸ்லிம்

மீடியாபோரம்கண்டிக்கிறது

சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினருமான யூ.எல். மப்ரூக் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது. மப்ரூக், ஜூலை 2ஆம் திகதி புதன்கிழமை இரவு அட்டாளைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதியினால்.

“என்னைப் பற்றி எப்படி கதை எழுதுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பி ஊடகவியலாளர் தாக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது, மேலும் இது குறித்து போலீஸ் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை ஊடகவியலாளர்களின் பணிக்கு நேரடியான அச்சுறுத்தலாக இருப்பதுடன் ஊடக சுதந்திரத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. ஊடகவியலாளர் மப்ரூக் மீதான தாக்குதல் போன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏனைய ஊடகவியலாளர்களுக்கு எதிராக இடம்பெறாமல் இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

எனவே இந்த சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு ஊடகவியலாளர் மன்றம் கேட்டுக் கொள்கிறது. பாதிக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு உரிய நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top