நில சக்தி வேலைத்திட்டம் தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்.

“நில சக்தி” (பிம் சவிய) வேலைத்திட்டம் தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் – 2026 “நில சக்தி” (பிம் சவிய) வேலைத்திட்டம் தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் – 2026/06/02 அன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. “நில சக்தி” வேலைத்திட்டம் தொடர்பான மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது 02.06.2026 திகதி புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களது வழிகாட்டல்களுக்கு அமைவாக மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷனி ஸ்ரீகாந்த்…

Read More

காத்தான்குடிக் கடற்கரையைச் சுத்தம் செய்யும் நிகழ்வு.

காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற “சுற்றுச்சூழல் பாதுகாப்பு கடற்கரையைச் சுத்தம் செய்யும் நிகழ்வு(CBG)”இன்று(01)காலை காத்தான்குடி நகர சபையின் கௌரவ நகர முதல்வர் அல்ஹாஜ் SHM.அஸ்பர் JPதலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் செயலாளர் திருமதி றினோசா முப்லிஹ்,காத்தான்குடி நகர சபையின் கௌரவ உறுப்பினர் மௌலவி அஜ்வத்(பலாஹி)JP மற்றும் நகர சபையின் உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் கலந்து கொண்டனர். செயலாளர் தனது உரையில்வாரம் இரண்டு தடவை கடற்கரையை துப்புரவு செய்கின்ற நிகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும், கடற்கரைச்…

Read More

புதிய காத்தான்குடி மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயலின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா.

புதிய காத்தான்குடி கடற்கரையோர வீதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயலின் புதிய கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம் ஞாயிற்றுக்கிழமை (31) காலை 07.00 மணியளவில் பக்திப்பூர்வமாக இடம்பெற்றது. மேற்படி பள்ளிவாயலின் நம்பிக்கையாளா் சபை சபை தலைவர் ஏ.பீ.எம்.றஜாயி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்ச்சியில் புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இணைந்து நாட்டி வைத்தனர். காத்தான்குடி மஃஹதுஸ்ஸுன்னா அந்நபவிய்யா மகளிா் அரபுக் கல்லூரியின் தலைவா் அஷ்ஷெய்க் எம்.சீ.எம்.றிஸ்வான் (மதனி) அவா்களினால் சிறப்பரை…

Read More

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் ஹஜ், வெசாக் விருந்துபசாரம்.

ஹஜ்ஜுப்பெருநாள் மற்றும் வெசாக் வாரத்தினை முன்னிட்டு கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலக நலன்புரிச்சங்கம் ஏற்பாடு செய்த விருந்துபசார நிகழ்வு இன்று (01/06/2026) திங்கட்கிழமை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. பிரதேச செயலாளரும் நலன்புரிச்சங்கத் தலைவருமான ஏ.தாஹிர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் எச்.எம்.எம்.பாறூக், பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், நிருவாக உத்தியோகத்தர் எஸ்.ஏ.றஹீம், நலன்புரிச்சங்கச்செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.பி.எம்.முஸ்தபா மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

Read More

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தின் வெசாக் குளிர்பானப்பந்தல்.

வாழைச்சேனை பொலிஸாரின் ஏற்பாட்டில் வெசாக் சிறப்பு குளிர்பானப்பந்தல் வாழைச்சேனை உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.எஸ்.எம்.ஜரூள் அவர்களின் வழிகாட்டலில் வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கே.எஸ்.பி.சஞ்ஜீவ அவர்களின் தலைமையில் வெசாக் தினத்தைச் சிறப்பிக்கும் வகையில் குளிர்பான பந்தல் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு குளிர்பானம் வினியோகிக்கப்பட்டது நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலையைக் கருத்திற்கொண்டு பயணிகள் மற்றும் பொதுமக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் இந்நிகழ்வு செய்யப்பட்டிருந்துடன், பகலுணவும் வழங்கி வைக்கப்பட்டது. சர்வமதத்தலைவர்களின் பங்குபற்றுதலுடன் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை…

Read More

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட கெப் ரக வாகனங்கள் உத்தியோகபூர்வமாக கையளிப்பு.

இலங்கை பொலிஸ் பயன்பாட்டிற்காக, இந்திய – இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 134 கெப் (Cabs) ரக வாகனங்களை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கும் நிகழ்வானது திங்கள்கிழமை (25) அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்திய – இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ் இந்தியா இலங்கைக்கு வழங்கி வரும் தொடர்ச்சியான ஆதரவிற்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்த பணிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட பணியாளர்களுக்கும் தனது நன்றிகளையும் ஜனாதிபதி…

Read More

ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தில் இருள்சூழ்ந்த இடங்களில் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டன.

ஏறாவூர் மிச்நகர் பிரதேசத்தில் இருள்சூழ்ந்த இடங்களை ஒளியூட்டும் வேலைத்திட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் இன்று வெள்ளிக்கிழமை காலை அடையாளப்படுத்தப்பட்ட மின்கம்பங்களுக்கு மின்குமிழ்கள் பொருத்தப்பட்டன.சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மிச்நகர் வட்டார கௌரவ உறுப்பினர் MH.சபூர்தீன் ஹாஜியார் அவர்களின் முயற்சியின் பலனாக ஏறாவூர் பற்று பிரதேசசபை ஊழியர்களினால் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டன.இதன்போது மிச்நகர் சனசமூக நிலையத்தின் நிருவாகிகளும் கலந்து கொண்டிருந்தனர் . இருள்சூழ்ந்த இடங்களுக்கு ஒளியூட்டியமைக்காக பிரதேச பொதுமக்கள் ஏறாவூர் பற்று பிரதேசசபையின் மிச்நகர் வட்டார கௌரவ உறுப்பினர்…

Read More

17வது தேசிய படையினர் தின நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு.

கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள தேசிய படையினர் நினைவிடத்திற்கு முன்பாக இன்று (19) பிற்பகல் நடைபெற்ற 17ஆவது தேசிய படையினர் தின நினைவு நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துகொண்டார். தமக்காக அன்றி, நாட்டிற்காகத் தமது உயிர்களைத் தியாகம் செய்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட படையினருக்கு தேசத்தின் நன்றிகளைத் தெரிவித்ததுடன், அவர்களை நமது இலங்கை மண்ணில் பெற்றெடுத்த அன்பிற்குரிய பெற்றோர்களுக்கும், குடும்பங்களின் அனைத்து உறவினர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார். சுதந்திரமான நாடும், அதேபோன்று அபிவிருத்தியடைந்த தேசமுமே அன்று…

Read More

அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவில் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

நான்கு வீதிகளின் அபிவிருத்திப்பணிகள் ஆதம்பாவா எம்பியினால் ஆரம்பம் கிராமிய வீதி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (18) நடைபெற்றது. இந்நிகழ்வு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஏ.சீ.அப்கர் அவர்களின் தலைமையில், அம்பாறை மாவட்ட கரையோரப்பிரதேச அபிவிருத்திக் குழுத்தலைவரும் இலங்கை அரசியலமைப்புப்பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் பங்கேற்புடனும் நடைபெற்றது. இதன்போது ரூபா 4 மில்லியன் செலவில்அட்டாளைச்சேனை வட்டானை வீதி, ரூபா 3 மில்லியன் செலவில்…

Read More

ராகமை ரணவிரு செவன பராமரிப்பு நிலையத்திற்கு ஜனாதிபதி விஜயம்.

ராகமையில் அமைந்துள்ள “ரணவிரு செவன” பராமரிப்பு நிலையத்திற்கு இன்று (19) முற்பகல் விஜயம் செய்து, அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் பாதுகாப்பு படையினரின் நலன்கள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்து கொண்டார். தாய்நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக பாதுகாப்பு படையினர் அனைவரும் செய்த அர்ப்பணிப்புகளை நினைவுகூர்ந்து பாராட்டுக்களை தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, “ரணவிரு செவன” பராமரிப்பு நிலையத்தில் பணிபுரியும் வைத்தியர்கள் உட்பட ஊழியர்களுடன் கலந்துரையாடியதுடன், சிகிச்சை பெற்று வரும் பாதுகாப்பு படையினர்களுக்காக மேலும் வழங்கக்கூடிய மருத்துவ மற்றும் சேவை வசதிகள்…

Read More
Back To Top