பொலன்றுருவை, ஜெயந்திபுரத்தில் ரூ. 29.5 மில்லியன் செலவில் கட்டப்பட்ட, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய தபால் நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது.
. உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் மற்றும் மனித வளங்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் மக்களின் நம்பிக்கையைப் பெறும் ஒரு தபால் சேவை இந்த நாட்டில் கட்டமைக்கப்பட்டு வருகிறது – சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ. பொலன்றுவை மாவட்டத்தின் ஜயந்திபுர மக்களுக்கு மிகவும் திறமையான, முறையான மற்றும் மக்கள்-நட்பு தபால் சேவையை வழங்கும் நோக்கத்தில், அனைத்து நவீன வசதிகளுடன் புதிதாகக் கட்டப்பட்ட ஜயந்திபுர புதிய தபால் அலுவலகக் கட்டிடம், சுகாதார…
புகைப்படப்பிடிப்பு ஆற்றல் மூலம் வரலாற்றை தத்ரூபமாக பதிவு செய்தவர் எஸ்.எம்.சுரேந்திரன்.
சிரேஷ்ட புகைப்படப்பிடிப்பாளர் சண்முகலிங்கம் சுரேந்திரன் அவர்களின் மறைவு தொடர்பில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறது. வீரகேசரி பத்திரிகையின் புகைப்பட ஊடகவியலாளராக சுமார் நான்கு தசாப்த காலத்திற்கும் மேலாக பணியாற்றிய அவர், சில மாதங்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் திருகோணமலையில் இன்று (26.07.2026) காலமான செய்தியை அறிந்து நாம் ஆழ்ந்த துயருறுகிறோம். தனது புகைப்படக் கருவி ஊடாக வரலாற்றின் முக்கிய பக்கங்களை தத்ரூபமாக பதிவு செய்த அவர், இன வன்முறைகள், போர்க் கால…
புதிய கடற்படைத் தளபதி மற்றும் இலங்கை பொலிஸ் மா அதிபர் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு.
இலங்கை கடற்படையின் 27 ஆவது கடற்படைத் தளபதியாகப் பதவியேற்ற வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் இலங்கை பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு இடையிலான விசேட உத்தியோகபூர்வ சந்திப்பொன்று நேற்று (2026 ஜூலை 17) கொழும்பிலுள்ள பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது. பொலிஸ் தலைமையகத்திற்கு வந்தடைந்த கடற்படைத் தளபதியை, பொலிஸ் மா அதிபர்.ஜெனரல் பிரியந்த வீரசூரிய, புதிய கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து உற்சாகமாக வரவேற்றார். இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, நாட்டில் சட்டம்…
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கான அடையாளப் பெயர்ப் பலகை அமைக்கும் பணி முன்னெடுப்பு.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலய கட்டிடத்தை அடையாளப்படுத்தும் பெயர்ப்பலகை ஏறாவூர் நகரசபையினால் நேற்று வியாழக்கிழமை(16/07) நகரசபையின் தவிசாளர் எம்.எஸ். நழீம் தலைமையில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அலுவலகத்திற்கான அடையாளப் பெயர்ப் பலகை அமைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. காத்தான்குடி மற்றும் ஒட்டமாவடி உள்ளிட்ட பிரதேசங்களிலிருந்து மட்டக்களப்பு மத்தி கல்வி வலய அலுவலகத்திற்கு வருகை தரும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள், அலுவலகத்தை எளிதில் அடையாளம் கண்டு சென்றடையும் வகையில், புன்னக்குடா வீதியின் ஆரம்பப் பகுதியில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் …
எல் நினோ தாக்கத்தை எதிர்கொள்ள மட்டக்களப்பு தயாராகிறது: துறைசார் நிபுணர்கள் பங்கேற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்.
எதிர்வரும் எல் நினோ (El Niño) காலநிலை தாக்கங்களை முன்னெச்சரிக்கையுடன் எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை வலுப்படுத்தும் நோக்கில், மட்டக்களப்பு மாவட்ட எல் நினோ மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (13) மாவட்ட செயலாளர் ஜே. எஸ். அருள்ராஜ் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் புதிய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் ஏ. எஸ். எம். ஸியாத் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், எல் நினோவின் செல்வாக்கும் அதன் தாக்கங்களை…
உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடம்.
உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது ஆசியாவில் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் உள்ளது. இந்த புள்ளிவிபரத்தின்படி, உலகின் அதிக போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடாக நைஜீரியா முதலிடத்திலும், கோஸ்டாரிகா இரண்டாவது இடத்திலும் உள்ளன. எஸ்தோனியா மிகக் குறைந்த போக்குவரத்து நெரிசல் கொண்ட நாடாகக் கருதப்படுகிறது. ஒஸ்ட்ரியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளும் குறைந்த நெரிசல் கொண்ட நாடுகளின் பட்டியலில் உள்ளன. ‘நம்பியோ’…
டெங்கற்ற கிழக்கு – பாதுகாப்பான சமூகத்தை நோக்கி”: கல்முனையில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் விழிப்புணர்வு செயற்றிட்டம் ஆரம்பம்.
நாட்டில் தீவிரமடைந்து வரும் டெங்கு அச்சுறுத்தலில் இருந்து மக்களை மீட்டெடுப்பதற்கான சமூக மட்டத்திலான விழிப்புணர்வு மற்றும் ஒழிப்புச் செயற்றிட்டம், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த மக்கள் நல செயற்றிட்டம் தொடர்பான முக்கிய கலந்துரையாடல், நேற்று (11) கல்முனை பிரதான வீதியில் அமைந்துள்ள ஆசாத் பிளாசா மண்டபத்தில், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்றது. இச்செயற்றிட்டத்தின் அவசியம் குறித்து விளக்கிய ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்,…
புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு .
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள இரண்டாவது பிரதான பாலமான புதுப் பாலம் அண்மையில் (28.06.2026) உடைந்து விழுந்தது. அந்த பாலத்திற்கு பதிலாக தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் நேற்று (09) மாலை முடிவடைந்தன. அதனைத் தொடர்ந்து இன்று (10) காலை 9 மணி அளவில் மீண்டும் மக்களின் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் சுமார் 3.5 மில்லியன் ரூபாய் செலவில் இந்த தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வீதியினை பயன்படுத்தும் பொதுமக்கள் பாலத்திற்கு முன்பு…
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நடைபெற்ற மோதலில் காயமடைந்த அதிகாரிகள் மற்றும் கைதிகளின் நலனை விசாரிப்பதற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் இலங்கை தேசிய மருத்துவமனைக்கு விஜயம்…
நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த மோதலில் காயமடைந்து, தற்போது இலங்கை தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகளின் நலனை விசாரிப்பதற்காக, சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று பிற்பகல் (07) இலங்கை தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார். அதன்போது, அமைச்சர், தேசிய வைத்தியசாலையின் 72 மற்றும் 79-வது விடுதிகள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்றுவரும் சிறைச்சாலை அதிகாரிகளையும் கைதிகளையும் நேரில் சந்தித்து, அவர்களின் நலம் விசாரித்ததோடு,…
Dream Destination’ திட்டத்தின் கீழ் நவீனமயப்படுத்தப்பட்ட நாராஹேன்பிட்டி புகையிரத நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு.
அரச – தனியார் கூட்டுப் பங்களிப்புடன் நாடு முழுவதிலும் உள்ள 100 புகையிரத நிலையங்களின் வசதிகளை மேம்படுத்தி நவீனமயமாக்கும் Dream Destination திட்டத்தின் கீழ், வசதிகள் மேம்படுத்தப்பட்டு நவீனமயமாக்கப்பட்ட நாரஹேன்பிட்ட புகையிரத நிலையம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காகக் கையளிக்கும் நிகழ்வு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில் இன்று (06) முற்பகல் நடைபெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ், இலங்கை புகையிரத திணைக்களத்தின் மேற்பார்வையில், Clean…
