Headlines

சாவகச்சேரியில்  புதிய பொலிஸ் விடுதி திறந்து வைப்பு.

சாவகச்சேரியில் புதிய பொலிஸ்உத்தியோகத்தர் விடுதி திறந்து வைப்பு. சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் விடுதி இன்று ஞாயிற்றுக்கிழமை (14) பிற்பகல் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபாலவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. திறப்புவிழா வைபவத்தில் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன்,பொலிஸ்மா அதிபர்,வடமாகாண பிரதிப் பொஸிஸ்மா அதிபர்,யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர்,பொலிஸ் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Read More

பேராதனை வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கையளிப்பு.

பேராதனை போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் பிரதான மருத்துவ ஆய்வு கூடம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14) பொதுமக்களிடம் கையளிப்பு. பேராதனை போதனா வைத்தியசாலையின் 92 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நவீனமயப்படுத்தப்பட்ட விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் பிரதான மருத்துவ ஆய்வு கூடம் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் தலைமையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (14) பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளது. பேராதனை போதனா மருத்துவமனையில் குறைந்தபட்ச வசதிகளுடன் இயங்கி வந்த விபத்து…

Read More

கடற்தொழில் திணைக்கள பணிப்பாளரின் அவசர அறிவித்தல்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் தொடர்ந்தும் கொந்தளிப்பாகக் காணப்படும் : காங்கேசன்துறையில் இருந்து கற்பிட்டி வரை மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்ந்து இடைநிறுத்தம் – கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகத்திடமிருந்து அவசர அறிவித்தல் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் 2026.06.11 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, கடந்த ஜூன் மாதம் 08 ஆம் திகதி முதல் நிலவி வரும் சீரற்ற வானிலை நிலவரத்தில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை என்பதன் காரணமாக, நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது மிகவும் அவதானமாக…

Read More

7வது சீனா-தெற்காசியா ஒத்தழைப்பு மன்றத்தில் உரையாற்றினார் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரா.

7வது சீனா–தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா உரை “அண்டை நாடுகளுடன் இணைந்த எதிர்காலத்திற்கான ஒத்துழைப்பு கூட்டாண்மையை வலுப்படுத்துதல்” என்ற கருப்பொருளின் கீழ் சீனாவின் யுன்னான் மாகாணத்தின் குன்மிங் நகரில் நடைபெற்ற 7வது சீனா–தெற்காசிய ஒத்துழைப்பு மன்றத்தில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கலந்து கொண்டார். மன்றத்தில் உரையாற்றிய பிரதி அமைச்சர், பிராந்திய ஒத்துழைப்பு, பரஸ்பர மரியாதை, அமைதியான இணை வாழ்வு மற்றும் கூட்டு வளர்ச்சி ஆகியவற்றிற்கான இலங்கையின்…

Read More

சீன மக்கள் குடியரசில் நடைபெற்ற இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வில் பங்கேற்ற இலங்கைப் பாராளுமன்ற தூதுக் குழு.

சீன மக்கள் குடியரசில் நடைபெற்ற இலங்கைப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான செயலமர்வில் பங்கேற்ற இலங்கைப் பாராளுமன்ற தூதுக் குழு, அதன் உத்தியோகபூர்வ நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளது. வெகுசன ஊடக பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன அவர்களது தலைமையிலான இந்தப் பாராளுமன்ற தூதுக் குழு, 2026 மே 26 முதல் ஜூன் 04 வரை சீனாவின் சீனாவின் தேசிய அபிவிருத்தி மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் சர்வதேச ஒத்துழைப்பு நிலையத்தினால் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் பங்கேற்றது. இந்த…

Read More

ஐக்கிய தேசியக் கட்சியின்செயற்குழுக் கூட்டம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று (11) பிற்பகல் கொழும்பு மால் வீதியிலுள்ள கட்சியின் அரசியல் அலுவலகத்தில், முன்னாள்  ஜனாதிபதியும் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் கலந்து கொண்டதுடன், நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பில் கட்சி எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பு கட்டமைப்பை மீளக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்கள் தொடர்பாக…

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் விஷேட விவசாய குழுக்கூட்டம்.

மட்டக்களப்பு மாவட்டம் விசேட விவசாய குழு கூட்டம்!! மட்டக்களப்பு மாவட்ட விசேட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்களின் தலைமையில் மாவட்ட விவசாய பணிப்பாளர் ஆர்.சிவநேசன் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமைந்துள்ள பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (11) இடம்பெற்றது. இதன்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை இனங்கண்டு உரிய விவசாயிகளுக்கான நஸ்டஈடுகளை வழங்கப்பட்டமையில் எற்பட்ட தாமதங்கள் மற்றும் குறைபாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், விவசாய…

Read More

மட்/மம/மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலையின் 63ஆவது ஆண்டு நிறைவு விழா.

மட்/மம/மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலையின் 63ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கலை, கலாச்சார மற்றும் கௌரவிப்பு நிகழ்வு கடந்த (06) ஆம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு பாடசாலை விளையாட்டு மைதானத்தில் பாடசாலையின் அதிபர் வி.டி. ஜனூன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் எம்.எஸ். நழீம் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண கிராமிய வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் எம்.எச்.எம்….

Read More

மூதூர் பிரதேசசபையினால் சிரமதானப்பணி.

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மூதூர் பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை (05) கடற்கரை பகுதி சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது. இதன்போது மூதூரிலுள்ள சம்பூர், தக்வாநகர்,கடற்கரைச்சேனை பகுதிகளின் கடற்கரைப் பகுதி தூய்மைப்படுத்தப்பட்டது. இவ் சிரமதானப் பணியை மூதூர் பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள்,பிரதேச சபையின் தூய்மைப் பணியாளர்கள் இணைந்து முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Read More

உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வும் மரம் நடுகையும்.

மட்டக்களப்பில் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு, “எதிர்கால காலநிலை பாதுகாப்பிற்கு இயற்கையே எமது உந்துசக்தி” என்ற தொனிப்பொருளில் விழிப்புணர்வு நிகழ்வும் கண்டல் தாவர மீள்நடுகைத் திட்ட ஆரம்ப நிகழ்வும் இன்று (05) நடைபெற்றது. அக்ஷன் யுனிட்டி லங்கா (AU Lanka) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளர் கே. கஜன் தலைமையில், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த் அவர்களின் பங்கேற்புடன் தேவநாயகம் மண்டபத்தில் இந்நிகழ்வு ஆரம்பமானது. இதன்போது, வாழ்வாதார மேம்பாட்டை அடிப்படையாகக் கொண்டு கண்டல்…

Read More
Back To Top