கொழும்பு புறநகர்ப் பகுதியில் மின்சார  ரயில்களை  சேவையில் ஈடுபடுத்துவது குறித்து விஷேட கலந்துரையாடல் .

கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய வடிவில் முன்னெடுப்பது மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (29) முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி பங்கேற்றார். கொழும்பு புறநகர் ரயில்வே திட்டம்(Colombo Suburban Railway Project) குறித்து விரிவாக ஆராயப்பட்டதோடு இத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் களனிவெளி ரயில் பாதையில் மருதானையிலிருந்து மாகும்புர, பிரதான ரயில் பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து ராகம,கடலோர ரயில் பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை முதலாவது கட்டமாக செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள…

Read More

காத்தான்குடி முதியோர் இல்லத்தில் மருத்துவ முகாம் .

காத்தான்குடி முதியோர் இல்லத்தில் ஆயுர்வேத மருத்துவ முகாம் — எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் – காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் மஞ்சந்தொடுவாய் யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை வைத்தியர்களினால் இன்று (29) புதன்கிழமை ஆயுர்வேத மருத்துவ முகாம் காத்தான்குடி முதியோர் இல்லத்தில் நடாத்தப்பட்டது. காத்தான்குடி பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மெளஜுத் தின் வழிகாட்டலில் இவ் மருத்துவ முகாம் நடைபெற்றது. மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் யூணானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்திய சாலையின் வைத்தியர் எல்.பவித்ரா…

Read More

27வது வக்பு சபை நியமிப்பு.

27 ஆவது வக்ப் சபையின் புதிய உறுப்பினர்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்களிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றனர். இலங்கையில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் தரும நிதியங்களை ஒழுங்கபடுத்தும் உச்ச அமைப்பான வக்ப் சபையின் புதிய தலைவர் மற்றும் சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 28ம் திகதி அன்று மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் நடைபெற்ற…

Read More

மட்டக்களப்பு கல்லடியில் புதிய பனை கைப்பணி பயிற்சி நிலையம் திறந்து வைப்பு.

மட்டக்களப்பில் புதிய பனை கைப்பணிப் பயிற்சி நிலையம் திறப்பு! பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் , மட்டக்களப்பு – கல்லடி வேலூரில் அமைக்கப்பட்ட புதிய கைப்பணிப் பயிற்சி நிலையத்தை இன்று(28) திறந்து வைத்தார். பனை அபிவிருத்திச் சபையின் அனுசரணையுடன், அப்பகுதிப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஸ்ரீபாலவிநாயகர் பொதுக் கட்டடத்தில் இந்த நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு பெண்களுக்குப் பனை சார்ந்த கைப்பணிப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வின்போது, பனை கைப்பணிக் கற்கை…

Read More

ஓட்டமாவடி காவத்தமுனையில் தாய்சேய் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு.

காவத்தமுனையில் தாய்சேய் சிகிச்சை நிலையம் நிரந்தரக்கட்டடத்தில் திறந்து வைப்பு (எஸ்.எம்.எம்.முர்ஷித்) ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை கிராமத்தில் மிக நீண்டநாள் தேவையாகக் காணப்பட்ட தாய்சேய் சிகிச்சை நிலையம் இன்று (28/04/2025) செவ்வாய்க்கிழமை நிறந்தரக்கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.முரளீஸ்வரன் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எம்.எம்.ஹலால்தீன்,…

Read More

ஏறாவூரில் தேசிய மருந்தக விழிப்புணர்வு வேலைத்திட்டம் .

ஏறாவூரில் தேசிய மருந்தக விழிப்புணர்வு செயற்திட்டம். “கிளீன் சிறிலங்கா ” மற்றும் “ரட்டம எகட்ட ” தேசிய திட்டங்களின் கீழ் நாடளாவிய ரீதியில் மருந்தகங்களை மையப்படுத்திய விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் எல்லைக்குட்பட்ட தனியார் மருந்தகங்களுக்கு கள விஜயம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஊட்டும் வேலைத்திட்டம் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சாபிறா வசீம் தலைமையில் திங்கள்கிழமை (27)அன்று இடம்பெற்றது . விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் ஏறாவூர் நகர் பிரதேச…

Read More

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் கலை நிகழ்வு.

மட்டக்களப்பு மாநகர சபையும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் இணைந்து நடாத்திய பட்டத் திருவிழாவும் பௌர்ணமி கலை நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கல்லடி கடற்கரையில் இடம்பெற்றது .

Read More

கல்குடா பிரீமியர் லீக் கிரிக்கெட் திருவிழா ஆரம்பம்..

கல்குடா பிரீமியர் லீக் பருவகால கிரிக்கெட் திருவிழா பிரமாண்டமாக ஆரம்பம் கல்குடா பிராந்தியத்தின் விளையாட்டுத்துறையில் மிக முக்கியமான நிகழ்வாகக்கருதப்படும் “கல்குடா பிரீமியர் லீக் – 2026” (KPL Season-09) கிரிக்கெட் தொடரின் ஆரம்ப விழா நேற்று 25.04.2026ம் திகதி சனிக்கிழமை மதியம் 1.00 மணிக்கு ஓட்டமாவடி அமீர் அலி பொதுமைதானத்தில் மிக விமரிசையாக நடைபெற்றது. நியூ ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் (NSSC) தலைவர் ZM.றிஹாஸ் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர்…

Read More

குச்சவெளி தவிசாளர் வேண்டுகோளை ஏற்று இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் .

தவிசாளர் முபாரக்கின் விசேட வேண்டுகோளில் இரத்த சுத்திகரிப்பு இயந்திரம். குச்சவெளி பிரதேச மக்களின் நீண்டகாலத்தேவையை நிவர்த்தி செய்யும் வகையில், இரத்த சுத்திகரிப்பு (Dialysis) இயந்திரத்தை ஒரு மாத காலத்திற்குள் பெற்றுத்தருவதாக தெற்காசிய பணிப்பாளர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ.எம்.முஜீப் உறுதியளித்துள்ளார். குச்சவெளி பிரதேசத்தில் வாழ்கின்ற சுமார் 17 ஆயிரம் மக்களின் சுகாதாரத்தேவைகளையும், குறிப்பாக சிறுநீரகக்குறைபாட்டினால் பாதிக்கப்பட்டு பல சிரமங்களுக்கு மத்தியில் தூர இடங்களுக்குச் சென்று இரத்த சுத்திகரிப்பு (Dialysis) செய்து வருகின்ற மற்றும் செய்ய முடியாது தவிக்கும் நோயாளிகளின்…

Read More

மூதூரில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதிய வீடுகளை அமைக்க நிதியுதவி .

மூதூரில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருக்கு புதிய வீடுகள்: முதற்கட்ட நிதியுதவி வழங்கி வைப்பு ​அரசாங்கத்தின் புனர்வாழ்வு அபிவிருத்தி திட்டத்தின் கீழ், மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த மக்களுக்கான வீட்டுத்திட்டம் காசோலை வழங்கி வைக்கப்பட்டது. ​2006ஆம் ஆண்டு யுத்த சூழலினால் இடம்பெயர்ந்து, தங்களது வீடுகளை முழுமையாக இழந்த 38 பயனாளர்கள் இத்திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ​ஒவ்வொரு வீடும், தலா 20 லட்சம் ரூபாய் செலவில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்காக, முதற்கட்டமாக…

Read More
Back To Top