கொழும்பு புறநகர்ப் பகுதியில் மின்சார ரயில்களை சேவையில் ஈடுபடுத்துவது குறித்து விஷேட கலந்துரையாடல் .
கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய வடிவில் முன்னெடுப்பது மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (29) முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி பங்கேற்றார். கொழும்பு புறநகர் ரயில்வே திட்டம்(Colombo Suburban Railway Project) குறித்து விரிவாக ஆராயப்பட்டதோடு இத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் களனிவெளி ரயில் பாதையில் மருதானையிலிருந்து மாகும்புர, பிரதான ரயில் பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து ராகம,கடலோர ரயில் பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை முதலாவது கட்டமாக செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள…
