Headlines

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேச செயலக  மக்களுக்கு காசோலை வழங்கி வைப்பு.

டித்வா புயலினால் சேதமாக்கப்பட்ட வீடுகளின் புனரமைப்பு பணிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு மூதூர் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(12) காலை இடம்பெற்றது. இதன்போது மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 19 பயனாளிகளுக்கான நஷ்டஈட்டுக்கா காசோலையினை பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர பிரதம  அதிதியாக கலந்து கொண்டு வழங்கி வைத்தார். இதன்போது வீடுகளின் பாதிப்புகளுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொருவருக்கான பணம் காசோலையாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தேசிய மக்கள்…

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் சீரற்ற காலநிலை நிலவுகிறது .

மட்டக்களப்பு ஏறாவூரில் இன்று திங்கள்கிழமை நிலவிய சீரற்ற காலநிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது. காற்றுடன் கூடிய மழை பெய்தமையால் தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் தேங்கி நிற்பதை காண முடிகின்றது. இன்று பிற்பகல் வேளை வீசிய வேகமான காற்றுடன் அதிக மழையும் பெய்திருந்தது.மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு நிலவிய அதிக வெப்பநிலையினால் விவசாயிகள் பல சவால்களை எதிர்நோக்கியதாகவும் இன்று பெய்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

Read More

ஜனாதிபதியின் நிந்தவூர் வருகை தொடர்பில் நிந்தவூர் பிரதேச சபையில் இன்று  விசேட சபைக் கூட்டம்.

நிந்தவூர் பிரதேச சபையின் 05ஆவது சபையின் 02ஆவது விசேட கூட்டம் இன்று (11) நிந்தவூர் பிரதேச சபை மண்டபத்தில், தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் நடைபெற்றது. நாட்டின் அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயக்க அவர்களின் நிந்தவூர் வருகையை முன்னிட்டு, அதற்கான ஏற்பாடுகள் மற்றும் தொடர்புடைய செயற்பாடுகள் குறித்து இவ்விசேட சபைக் கூட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, 2026ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்தின் கீழ் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சிபாரிசில் நிந்தவூர் கலாச்சார மண்டபத்திற்கான நிதி…

Read More

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் முதல்வர் விஜய்.

தமிழக முதல்வர் விஜய் அவர்கள், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அரசியல் நாகரீகத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்தச் சந்திப்பில், ஆட்சி நிர்வாகம் மற்றும் மக்கள் நலப்பணிகள் குறித்து இருவரும் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.பதவியேற்ற பின் நடைபெற்ற இந்த முதல் சந்திப்பு தமிழக அரசியல் களத்தில் பெரும் வரவேற்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read More

முதலமைச்சர் ஜோசப் விஜய் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகப்பதவிப் பிரமாணம்.

இந்திய தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தற்காலிக சட்டமன்றப் பேரவை தலைவர் கருப்பையா, தமிழ்நாடு முதலமைச்சர். ச. ஜோசப் விஜய்க்கு சட்டமன்ற உறுப்பினராக இன்றைய தினம்  பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

Read More

இந்திய தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்பு.

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் திரு. சி. ஜோசப் விஜய்யின் முதலமைச்சர் பதவியேற்பு விழாவின் புகைப்படங்கள்.

Read More

தேசியத்தில் முதன்மை பெற்று சாதனை படைத்த வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை.

தேசியத்தில் அனைத்துப்பிரிவுகளிலும் முதன்மை பெற்று சாதனை படைத்த வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை தேசிய ரீதியில் தேர்தல் ஆணைக்குழுவினால் வாக்கின் பலம் எனும் தலைப்பில் நடாத்தப்பட்ட குறுந்திரைப்பட போட்டியில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை அனைத்துப்பிரிவுகளிலும் தேசிய ரீதியில் முதன்மை நிலை பெற்று சாதனை படைத்துள்ளது. குறும்படத்தை சமர்ப்பித்த என்.ஆர்.முஸ்ஹப் அஹமட், படப்பிடிப்புக்கு உதவிய எம்.என்.எம்.ஸஹ்ரான், எம்.எச்.எம்.நிஸ்பான் ஆகிய மாணவர்களுக்கும் குறும்படத்தில் நடித்த பிரதி அதிபர் எம்.ஏ.அபுதாஹிர் அவர்களுக்கும் தயாரிப்பு, வசனம், நெறியாள்கை அனைத்தையும் மேற்கொண்டு வெற்றி…

Read More

18 வயதை எட்டியவுடன் முதலாவது இரத்ததானம் வழங்கிய சம்மாந்துறை மாணவி .

இன்றைய இளைய சமுதாயத்திற்கு முன்மாதிரியாக, சம்மாந்துறை அல்-மர்ஜான் பாடசாலையைச் சேர்ந்த மாணவி ஒருவர் தனது 18 ஆவது வயதைப் பூர்த்தி செய்தவுடன் முதலாவது இரத்ததானத்தை வழங்கி பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளார். சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அவசர இரத்தத் தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில், அம்பாறை மாவட்ட உயிர் பாதுகாப்பு மற்றும் அவசரகால மீட்பு குழுவின் ஏற்பாட்டில் இன்று சம்மாந்துறையில் மாபெரும் மனிதாபிமான இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமில், அல்-மர்ஜான் பாடசாலையில் உயிரியல் பிரிவில் கல்வி கற்று வரும்…

Read More

35வது பிரதேச இளைஞர் விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்றவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்திய 35 ஆவது பிரதேச இளைஞர் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர் யுவதிகளுக்கான சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு செவ்வாய்கிழமை( 5)அன்றுஏறாவூர் நகர் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் AW. இர்சாத் அலி தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் அதிதிகளாக ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில், உதவிப் பிரதேச செயலாளர் யூ.எம்.அஸ்லம், பிரதேச செயலக கணக்காளர் திருமதி. தர்மினி, தேசிய…

Read More

மாலைதீவு ஜனாதிபதிக்கு சிறப்பு இரவு விருந்து வழங்கப்பட்டது .

மாலைதீவு ஜனாதிபதிக்குஇலங்கை ஜனாதிபதிமாளிகையில் இரவு விருந்து நேற்று இரவு இடம்பெற்றது . மாலைதீவு குடியரசின் ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு மற்றும் அவரது பாரியார் உள்ளிட்ட தூதுக்குழுவினருக்காக நேற்று (04) ஜனாதிபதி மாளிகையில் சிறப்பு இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Read More
Back To Top