டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மூதூர் பிரதேச செயலக மக்களுக்கு காசோலை வழங்கி வைப்பு.
டித்வா புயலினால் சேதமாக்கப்பட்ட வீடுகளின் புனரமைப்பு பணிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு மூதூர் பிரதேச செயலாளர் பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(12) காலை இடம்பெற்றது. இதன்போது மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 19 பயனாளிகளுக்கான நஷ்டஈட்டுக்கா காசோலையினை பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர பிரதம அதிதியாக கலந்து கொண்டு வழங்கி வைத்தார். இதன்போது வீடுகளின் பாதிப்புகளுக்கு ஏற்ற வகையில் ஒவ்வொருவருக்கான பணம் காசோலையாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தேசிய மக்கள்…
