Headlines

இந்தியாவில் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் வாக்கு எண்ணும் நடவடிக்கை நாளை இடம்பெறவுள்ளது.

தமிழகம், புதுவை உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (04) நடைபெறவுள்ள நிலையில், அதுதொடா்பான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த மாதம் 23ஆம் திகதி நடைபெற்றது. தோ்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு மத்திய பாதுகாப்புப் படையினா் மற்றும் மாநில பொலிஸாரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், அதுதொடா்பான இறுதிக்கட்ட…

Read More

கிராம அபிவிருத்தி சங்க காணி கொள்வனவுக்கு நிதியுதவி

கிராம அபிவிருத்திச்சங்க காணிக்கொள்வனவுக்கு கல்குடா யங் ஸ்டார் நிதியுதவி வாழைச்சேனை (206D) கிராம அபிவிருத்திச்சங்கம் முன்னெடுத்து வரும் காணிக்கொள்வனவு நடவடிக்கைக்கு கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினால் ஒரு தொகைப்பணம் இன்று அன்பளிப்புச் செய்யப்பட்டது. இன்று வாழைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்று வரும் காணிக்கொள்வனவு நிதி சேகரிப்பு உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் போதே குறித்த நிதி கையளிக்கப்பட்டது. கழகத்தின் பிரதித்தலைவர் ஏ.எல்.சதாம் தலைமையிலான உதைப்பந்தாட்ட அணி முகாமையாளர் எம்.எம்.முஸம்மில், கழக உறுப்பினர் டீ.சலாம் ஆகியோர் குறித்த நிதியினை…

Read More

ஏறாவூர் கிரிக்கெட் லீக் இன்று ஆரம்பமானது.

Eravur_Cricket_League_2026. தவிசாளர் எம்.எஸ். நழீம் அவர்களின் தலைமையில் கோலாகலமாக ஆரம்பம்ஆற்றங்கரை மைதானத்தில் உற்சாகமான உத்தியோகபூர்வ தொடக்கம். ஏறாவூரின் விளையாட்டு வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறும் Eravur Cricket League – 2026 கிரிக்கெட் தொடர் இன்று பிற்பகல் 4.00 மணிக்கு ஆற்றங்கரை மைதானத்தில் கோலாகலமான உத்தியோகபூர்வ வைபவத்துடன் ஆரம்பமானது. ஏறாவூர் கிரிக்கெட் லீக்கின் தலைவரான எம். பௌசர் அவர்களின் முன்னெடுப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் எம்.எஸ். நழீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து…

Read More

நுவரெலியாவில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் ஜனாதிபதி பங்கேற்பு.

நுவரெலியா சினிசிட்டா மைதானத்தில் நடைபெற்ற”மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம்” தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட மே தினக் கூட்டத்தில் இன்று (01) முற்பகல் ஜனாதிபதி கலந்துகொண்டிருந்தார்.

Read More

கொழும்பு புறநகர்ப் பகுதியில் மின்சார  ரயில்களை  சேவையில் ஈடுபடுத்துவது குறித்து விஷேட கலந்துரையாடல் .

கொழும்பு புறநகர்ப் பகுதிகளில் ரயில்வே சேவையை புதிய வடிவில் முன்னெடுப்பது மற்றும் அதற்கான திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (29) முற்பகல் நடைபெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதி பங்கேற்றார். கொழும்பு புறநகர் ரயில்வே திட்டம்(Colombo Suburban Railway Project) குறித்து விரிவாக ஆராயப்பட்டதோடு இத்திட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் களனிவெளி ரயில் பாதையில் மருதானையிலிருந்து மாகும்புர, பிரதான ரயில் பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து ராகம,கடலோர ரயில் பாதையில் கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை முதலாவது கட்டமாக செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள…

Read More

காத்தான்குடி முதியோர் இல்லத்தில் மருத்துவ முகாம் .

காத்தான்குடி முதியோர் இல்லத்தில் ஆயுர்வேத மருத்துவ முகாம் — எம்.ஏ.சீ.எம்.ஜெலீஸ் – காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் மஞ்சந்தொடுவாய் யூனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலை வைத்தியர்களினால் இன்று (29) புதன்கிழமை ஆயுர்வேத மருத்துவ முகாம் காத்தான்குடி முதியோர் இல்லத்தில் நடாத்தப்பட்டது. காத்தான்குடி பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மெளஜுத் தின் வழிகாட்டலில் இவ் மருத்துவ முகாம் நடைபெற்றது. மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் யூணானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்திய சாலையின் வைத்தியர் எல்.பவித்ரா…

Read More

27வது வக்பு சபை நியமிப்பு.

27 ஆவது வக்ப் சபையின் புதிய உறுப்பினர்கள் பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்களிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றனர். இலங்கையில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் தரும நிதியங்களை ஒழுங்கபடுத்தும் உச்ச அமைப்பான வக்ப் சபையின் புதிய தலைவர் மற்றும் சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 28ம் திகதி அன்று மத மற்றும் கலாசார விவகார பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் நடைபெற்ற…

Read More

மட்டக்களப்பு கல்லடியில் புதிய பனை கைப்பணி பயிற்சி நிலையம் திறந்து வைப்பு.

மட்டக்களப்பில் புதிய பனை கைப்பணிப் பயிற்சி நிலையம் திறப்பு! பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் , மட்டக்களப்பு – கல்லடி வேலூரில் அமைக்கப்பட்ட புதிய கைப்பணிப் பயிற்சி நிலையத்தை இன்று(28) திறந்து வைத்தார். பனை அபிவிருத்திச் சபையின் அனுசரணையுடன், அப்பகுதிப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஸ்ரீபாலவிநாயகர் பொதுக் கட்டடத்தில் இந்த நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இங்கு பெண்களுக்குப் பனை சார்ந்த கைப்பணிப் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்வின்போது, பனை கைப்பணிக் கற்கை…

Read More

ஓட்டமாவடி காவத்தமுனையில் தாய்சேய் சிகிச்சை நிலையம் திறந்து வைப்பு.

காவத்தமுனையில் தாய்சேய் சிகிச்சை நிலையம் நிரந்தரக்கட்டடத்தில் திறந்து வைப்பு (எஸ்.எம்.எம்.முர்ஷித்) ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காவத்தமுனை கிராமத்தில் மிக நீண்டநாள் தேவையாகக் காணப்பட்ட தாய்சேய் சிகிச்சை நிலையம் இன்று (28/04/2025) செவ்வாய்க்கிழமை நிறந்தரக்கட்டிடத்தில் திறந்து வைக்கப்பட்டது. ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் அவர்கள் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ்.முரளீஸ்வரன் கலந்து கொண்டதுடன், கௌரவ அதிதிகளாக ஓட்டமாவடி பிரதேச சபைத்தவிசாளர் எம்.எம்.எம்.ஹலால்தீன்,…

Read More

ஏறாவூரில் தேசிய மருந்தக விழிப்புணர்வு வேலைத்திட்டம் .

ஏறாவூரில் தேசிய மருந்தக விழிப்புணர்வு செயற்திட்டம். “கிளீன் சிறிலங்கா ” மற்றும் “ரட்டம எகட்ட ” தேசிய திட்டங்களின் கீழ் நாடளாவிய ரீதியில் மருந்தகங்களை மையப்படுத்திய விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் எல்லைக்குட்பட்ட தனியார் மருந்தகங்களுக்கு கள விஜயம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஊட்டும் வேலைத்திட்டம் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் சாபிறா வசீம் தலைமையில் திங்கள்கிழமை (27)அன்று இடம்பெற்றது . விழிப்புணர்வூட்டும் நிகழ்வில் ஏறாவூர் நகர் பிரதேச…

Read More
Back To Top