ஓட்டமாவடியில் பலத்த காற்று கணவன், மனைவி காயங்களுடன் வைத்தியசாலையில்
இன்று வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட பலத்த காற்றின் காரணமாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மூத்தவன் போடியார் வீதியில் வீட்டின் கூரை காற்றினால் அடித்துச்செல்லப்பட்டு முன்னாலுள்ள வீட்டின் மீது விழுந்துள்ளது. இதன் காரணமாக வீட்டிலிருந்த கணவன் மற்றும் மனைவி இருவர் காயமடைந்துள்ளனர்.
இதில் தலையில் பலத்த காயங்களுக்குள்ளான 66 வயதுடைய சீனி முஹம்மது செய்லத்தும்மா என்பவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

