
மட்டு மாநகர சபை மேயராக சிவம் பாக்கியநாதன்.
- ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு .
மட்டக்களப்பு .மாநகர சபை மேயர் தெரிவு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு அஸ்மி அவர்களின் தலைமையில் மாநகர சபை சபா மண்டபத்தில் 11.06.2015 காலை 08.40 மணிக்கு இடம்பெற்றது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த சிவம் பாக்கியநாதன் அவர்களை அதே கட்சியைச்சேர்ந்த கௌரவ மாசிலாமணி சண்முகலிங்கம் முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தியைச்சேர்ந்த கௌரவ நவரெத்தினராசா ரகுபரன் வழிமொழிய வேறு தெரிவுகளின்மையால் அவர் ஏகமனதாக மட்டு மாநகர சபை முதல்வராகத்தெரிவு செய்யப்பட்டார்.