ஏறாவூர் மீராகேணி வாராந்த சந்தை கட்டிடத்திற்கு அடிக்கல் நடும் நிகழ்வு.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் கிராமிய பொருளாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாண சபையின் ரூபாய் இரண்டு மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படவுள்ள ஏறாவூர் மீராகேணி வாராந்த சந்தை அபிவிருத்தித் திட்டத்தின் அடிக்கல் நடும் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது .

Read More

போலிச் செய்தி குறித்து பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ்வின் ஊடக அறிக்கை .

போலிச் செய்தி குறித்த விளக்கம்..!! ​கானா ஊடகங்களில் வெளிவந்ததாக கூறப்பட்டு, தங்க வியாபாரத்தில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் ஏமாற்றப்பட்டதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகிறது. அதில் கூறப்படும் தகவல்களை முற்றிலும் மறுக்கிறோம், அதில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்துக்கொள்கிறோம். ​உண்மையில், எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் வியாபார நோக்கத்திற்காக சவூதி அரேபியாவை சேர்ந்த நண்பர்களுடன் கானா நாட்டிற்குச் சென்றிருந்தபோது, அங்கே சிலர் ஏமாற்ற முனைந்ததை அறிந்து உடனடியாக, இந்த ஏமாற்று நடவடிக்கை குறித்து பொலிஸில்…

Read More

காத்தான்குடி மீடியா போரம் கள விஜயம்.

சவால்கள் நிறைந்த பூர்வீக கிராமம் – காத்தான்குடி மீடியா போரம் கள விஜயம். (எம்.பஹத் ஜுனைட்) மட்டக்களப்பு வவுணதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட உன்னிச்சை இருநூறுவில் கிராம மக்கள் எதிர்நோக்கு பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினர்கள் ஞாயிற்றுக் கிழமை (26) கள விஜயம் மேற்கொண்டனர். போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம்.நூர்தீன் தலைமையில் விஜயம் மேற்கொண்ட ஊடகவியலாளர்கள் அக்கிராம மக்கள் எதிர்நோக்கும் சவால்கள் பிரச்சினைகள் தொடர்பில் அக்கிராம மக்கள் மற்றும் பள்ளிவாயல் நிர்வாகிகளிடம் தகவல்களை…

Read More

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ஏறாவூருக்கு விஜயம் .

ஏறாவூர் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு டில்வின் விஜயம் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச்செயலாளர் தோழர் டில்வின் சில்வா நேற்று (25.10.2025) ஏறாவூரில் அமைந்துள்ள கிழக்கு புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு (ESSCA) விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார். புற்றுநோயாளர்களுக்கு மிகவும் முக்கியமான வைத்தியசாலையாக சேவைகளை வழங்கி வரும் குறித்த நிலையத்தின் செயற்பாடுகளை நேரடியாகப் பார்வையிட்டதுடன், எதிர்கால சமூக நலத்திட்டங்கள் குறித்து பயனுள்ள கலந்துரையாடலிலும் டில்வின் சில்வா ஈடுடட்டார். இவ்விஜயத்தின் போது, தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்…

Read More

ஏறாவூர் பிரதேசத்தில் வெள்ள அனர்த்தம் தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் .

அனர்த்த முகாமைத்துவ தொடர்பான கூட்டம் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது . அனர்த்த முகாமைத்துவ முன்னாயத்தம் தொடர்பான கலந்துரையாடல் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எச் முஸம்மில் தலைமையில் 24-10-2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலின் போது எதிர்வரும் நாட்களில் பருவப்பெயர்ச்சி மழை காரணமாக ஏறாவூரில் அனர்த்தங்கள் ஏற்படும் பட்சத்தில் எவ்வாறான முன் ஆயத்த ஏற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக இக்கலந்துரையாடலில் விரிவாக கலந்துரையாடப்பட்டது. பிரதேசத்தில் அனர்த்தம்…

Read More

சமூக ஊடகங்களை கையாளும் போது கூடிய அவதானம் தேவை.

Care Before you Shareசமூக ஊடகங்களின் ஊடாக ஒரு விடயத்தை பகிர்வதற்கு முன்னர், அதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். முந்தைய காலங்களில் ஒரு செய்தி மக்களிடம் சென்றடைய வேண்டுமென்றால், அதற்கான உரிய ஊடகங்களாக தொலைக்காட்சி, வானொலி மற்றும் செய்தித்தாள்கள் மட்டுமே காணக்கூடியதாக இருந்தன. அப்போது ஒரு செய்தி பிரசுரிக்கப்படவேண்டும் அல்லது ஒளிபரப்பப்படவேண்டும் என்றால், அந்தச் செய்தி பிராந்திய ஊடகவியலாளர்கள் மூலம் ஊடக நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட வேண்டியிருந்தது. அவ்வாறு அனுப்பப்படும் செய்திகளை தலைமை அலுவலகத்தில் இருக்கும்…

Read More

கிராஅத் போட்டியில் முதலிடம் ..

கிராஅத் போட்டியில் உமைர் அஹமட் முதலிடம் . செய்தியாளர் … உமர் அறபாத். மத்ரஸாவுகளுக்கு இடையிலான 10வயதின் கீழ் பிரிவில் காத்தான்குடியில் நடாத்தப்பட்ட கிராஅத் போட்டியில் முதலிடம் பெற்ற ஏறாவூர் அல் -மத்ரஸதுல் முஹம்மதியாவின் மாணவச் செல்வன் எம்.கே.உமைர் அஹமட் இற்கான கௌரவிப்பு நிகழ்வு சாபி பள்ளிவாயலில் மத்ரஸதுல் முஹம்மதியாவின் பணிப்பாளர் அஷ்ஷேய்க்.KMM.கபீர் (இஹ்ஸானி)தலைமையில் (16/10) வியாழக்கிழமை அன்று அஸர் தொழுகையினை தொடர்ந்து இடம்பெற்றது . நிகழ்வுக்கு பிரதம அதிதியாககாத்தான்குடி ஜாமிய்யதுல் ஜமாலியா அரபுக் கலாசாலையின் அதிபர்…

Read More

ஏறாவூர் 3A சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு

ஏறாவூர் 3A சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம். ஏறாவூர் 3A சனசமூக நிலையம் மற்றும் ஏறாவூர் சாரணர்கள் நலன்புரி சங்கத்தின்ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததானம் நிகழ்வு 11/10/2025 சனிக்கிழமை அன்று ஏறாவூர் முனீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் சனசமூக நிலையத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.றூமி தலைமையில் இடம்பெற்றது . மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கி விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இவ் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது . இதன்போது அதிக உதிரக் கொடையாளர்கள் கலந்து கொண்டு…

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டம் ஆரம்பம்!! மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தினை மேம்படுத்தல் தொடர்பான விவசாய அபிவிருத்திக்குழு கூட்டமானது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் தலைமையில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (14) இடம் பெற்றது. மாவட்டத்தில் விவசாயத்துறையை அபிவிருத்தி செய்வதற்காக 2025 ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் விவசாய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் எதிர் வரும் ஆண்டில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக இதன் போது கலந்துரையாடப்பட்டது. மாவட்டத்தில் பயிர்…

Read More

ஸ்தாபக போஷகராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன்.

முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக போஷகராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம்.அமீன் நியமனம்; நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிப்பு # ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக போஷகராக நியமிக்கப்பட்டுள்ள அதன் முன்னாள் தலைவரும் மூத்த ஊடகவியலாளருமான என்.எம். அமீன் அவர்கள் இன்று (11) சனிக்கிழமை பாராட்டி கௌரவிக்கப்பட்டார். போரத்தின் 2025/26 ஆம் ஆண்டுக்கான செயற்குழுவின் முதலாவது கூட்டம் இன்று கொழும்பில் போரத்தின் தலைவர் எம்.பி.எம். பைறூஸ் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது, மூத்த ஊடகவியலாளர் என்.எம். அமீன்…

Read More
Back To Top