ஆலையடிவேம்பு கிராம சேவகர் பிரிவுக்கொரு வீட்டுக்கு அடிக்கல்.

ஆலையடிவேம்பில் கிராம சேவகர் பிரிவுக்கொரு வீட்டுக்கு அடிக்கல் (எம்.எஸ்.எம்.ஸாகிர்) பிரஜாசக்தி நிதியொதுக்கீட்டின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்பக்கட்ட அடிக்கல் நடும் நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவில் நேற்று (11) புதன்கிழமை நடைபெற்றது. ஆலயடிவேம்பு பிரதேச செயலகப்பரிவுக்கு ஒதுக்கப்பட்ட 22 வீடுகளில் முதல் 03 வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்வு அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக் குழுத்தலைவரும்,…

Read More

போர் நிறுத்தத்துக்கு ஈரான் 3 முக்கிய நிபந்தனைகள் – சமாதான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவிப்பு

ஈரானுடனான மோதலை முடிவுக்கு கொண்டு வர மூன்று முக்கிய நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் தெரிவித்துள்ளார். சமீபத்தில் இடம்பெற்ற உரையொன்றில் அவர் கூறுகையில், ஈரானின் அடிப்படை உரிமைகள் மற்றும் இறையாண்மை மதிக்கப்பட வேண்டும் என்பதையும், எதிர்காலத்தில் ஈரானை குறிவைத்து எந்தவிதமான தாக்குதலும் நடைபெறாத வகையில் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். மேலும், போர் காரணமாக நாட்டிற்கு ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்….

Read More

மீண்டும் வரலாற்றுச் சாதனையை பதிவு செய்தது நிந்தவூர் அல்-அஷ்றக் கபடி அணி.

மீண்டும் வரலாற்றுச்சாதனை படைத்தநிந்தவூர் அல்-அஷ்றக் கபடி அணி. (எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்வியமைச்சுடன் இணைந்து இலங்கை பாடசாலை கபடி சங்கம் நடாத்திய 2026ம் ஆண்டுக்குரிய தேசிய மட்ட கபடிப்போட்டிகள் கம்பளை வெலம்பொட எக்ஸிலியன் உட்புற விளையாட்டரங்கத்தில் கடந்த 07, 08, 09ம் திகதிகளில் நடைபெற்றன. இப்போட்டிகளில் நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலையின் 14, 16, 18 ஆகிய வயதுப்பிரிவு கபடி அணிகள் பங்கு கொண்டு மூன்று அணிகளுமே வெற்றிவாகைசூடி பாடசாலைக்கு தேசிய ரீதியில் பெருமை தேடிக்கொடுத்துள்ளனர். இதில் 18 வயதுக்குட்பட்ட…

Read More

இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு.

இன்று(11) நள்ளிரவு முதல் Laugfsgas(லாஃப்ஸ் எரிவாயு) விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 12.5kg எரிவாயு சிலிண்டர் 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக 4630 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது. 5kg எரிவாயு சிலிண்டர் 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு புதிய விலையாக  1862 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.

Read More

மீன்பிடி தொடர்பில் விழிப்புணர்வு செயலமர்வு.

மீன்பிடி தொடர்பில் விழிப்புணர்வு செயலமர்வு. (நூருல் ஹுதா உமர்) மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் (மெசிடோ) ஏற்பாட்டில் கல்முனை பிராந்தியத்தைச்சேர்ந்த மீனவர்களுக்காக இலங்கையின் மீன்பிடித்துறை, மீனவர்களுக்கு நிலவும் சவால்கள் மற்றும் மீன்பிடி தொடர்பான சட்டங்கள் குறித்து விளக்கமளிக்கும் செயலமர்வு இன்று (11) கடற்றொழில், நீரியல்வளங்கள் திணைக்கள அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் நடைபெற்றது. மீனவர்களின் தொழில் முன்னேற்றத்தையும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில், மீன்பிடி நடவடிக்கைகளில் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட விதிமுறைகள்,…

Read More

இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் T20 வெற்றிக்கிண்ணம் தொடர்பாக கருத்து தெரிவிப்பு.

இந்திய அணியின் 2024 மற்றும் 2026 டி20 உலகக் கோப்பை வெற்றிகள் 50 ஓவர் உலகக் கோப்பைப் வெற்றிகளுக்கு  ஈடாகாது” என முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சஞ்சய் மஞ்ரேக்கர் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நிறைவடைந்த தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணி  தொடர்ச்சியாக இரண்டு டி20 உலகக் கோப்பைகளை வென்ற முதல் அணியாகவும்,  சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணியாகவும் பெருமை பெற்றுள்ளது . இதற்கு முன்னர் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது…

Read More

இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வு.

22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில்இன்று (மார்ச் 11) பவுனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. நேற்று, இன்று என கடந்த இரண்டு நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூபாய் .1,360 என உயர்ந்துள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச் சந்தை முதலீடுகள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும்…

Read More

ஏ.ஜ.ரோபோவை களமிறக்கியது ஜப்பான் கியோட்டோ பல்கலைக்கழகம் .

2026-ம் ஆண்டில் நாம் கற்பனை செய்ததை விடவும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) நம் வாழ்வோடு கலந்துவிட்டது. ஆனால், ரோபோவிடம் போய் நாம் ஆசிர்வாதம் வாங்குவோம் என்று என்றாவது நினைத்திருப்போமா? ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் அதை உண்மையாக்கியுள்ளனர். அவர்கள் உருவாக்கியுள்ள “புத்தாராய்டு” (Buddharoid) என்ற ஏ.ஐ ரோபோ உலகையே  தற்போது உற்றுநோக்க வைத்திருக்கிறது. இது வெறும் இயந்திரம் அல்ல; பௌத்த மதக் குருவைப் போலவே உடை உடுத்தி, அதே போன்ற உடல் அசைவுகளுடன் (Humanoid) செயல்படும் அதிநவீன…

Read More

ஐரோப்பிய வானில் தோன்றிய மர்ம ஒளிப் பிழம்பு.குறுகிய வினாடிகளில் வெடித்து சிதறியது.

ஐரோப்பிய வானில் தோன்றிய மர்ம ஒளிப் பிழம்பு… 6 வினாடிகளில் வெடித்துச் சிதறிய விண்கல். மார்ச் மாதம் 8ம் திகதி மாலை ஐரோப்பாவின் வான்பரப்பில் பிரகாசமான நெருப்புக் கோளம் மின்னல் வேகத்தில் கடந்து சென்றது. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இந்த அரிய நிகழ்வைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை, ஐரோப்பாவின் பல நாடுகளைச் சேர்ந்த மக்கள் ஒரு விசித்திரமான காட்சியைக் கண்டு உறைந்து…

Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரஜாசக்தி செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் .

மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரஜாசக்தி செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பிரஜாசக்தி செயற்திட்டம் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ் அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் புதிய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (10) இடம் பெற்றது. பிரஜாசக்தி செயற்திட்டத்தின் மூலம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இதன்…

Read More
Back To Top