இந்தியா சென்றடைந்தார் ஜனாதிபதி .
இந்தியா சென்றடைந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்தியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் கலந்துரையாடினார்.
இந்தியா சென்றடைந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்தியாவின் முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் கலந்துரையாடினார்.
வாழைச்சேனை கார்த்திகை தீபநாள். (எஸ்.எம்.எம்.முர்ஷித்) இன்று (சனிக்கிழமை) கார்த்திகை தீப நாளை முன்னீட்டு வருடாவருடம் கலைவாணி கலைமன்றத்தினால் ஒழுங்கு செய்யப்படுகின்ற இறந்தவர்களின் சமாதியில் விளக்கேற்றும் நிகழ்வு நடை பெறுவது வழக்கம். 2024 ம் ஆண்டின் கார்த்திக தீபம் ஏற்றும் நிகழ்வு வாழைச்சேனை கலை வாணி கலைமன்ற தலைவர் சு.டிலக்சன் தலைமையில் வாழைச்சேனை இந்து மையானத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் நூற்றுகனக்கான மக்கள் பங்கேற்றதுடன் கல்லறையில் உறங்கிகொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு அவர்களின் உறவினர்கள் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில் கலைவானி…
மல்வத்தையில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு! சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (13) மாலை வேளையில் சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பி நாயகர் புரம், மல்வத்தையை சேர்ந்த குலசேகரன் ரவி (வயது 62) என்பவரே மரணமடைந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்….
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு “மெய்யான கிறிஸ்மசும் மது இல்லாத சமுதாயம்” எனும் கருப்பொருளில் விழிப்புணர்வு வீதி நாடகம் மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை போதகர் k.தங்கராஜா தலைமையில் இடம்பெற்றது.
ஓட்டமாவடி கிட்ஸ் அகடெமியில் விதைப்பந்து பயிற்சிப்பட்டறை. எஸ்.எம்.எம்.முர்ஷித். சூழலியல் நேயமிக்க எதிர்கால சந்ததிகளை உருவாக்கும் நோக்கில் விதைப்பந்து எண்ணக்கருக்களை இவ்வருடம் ஹப்பி எய்ட் சிறார்கள் மத்தியில் விதைக்கிறது. வீட்டில் பயன்படுத்தப்பட்டு வீசப்படும் விதைகளை 5R முறையில் மீளப்பயன்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் விதைகளை சேகரித்து விதை பந்துகளாக்கி அழிந்த காட்டு பகுதிகளை மீள காடாக்கலாம் எனும் தலைப்பிலான கலந்துரையாடலும் விதைப்பந்து பயிற்சிப்பட்டறையும் இன்று (13) எல்லை வீதி, ஓட்டமாவடி-3ல் அமைந்துள்ள ஓட்டமாவடி கிட்ஸ் குர்ஆன் அகடெமியில் இடம்பெற்றது. இதில்…
வரலாற்று நிகழ்வில் தடம் பதித்தது ஏறாவூர் அல் அமான் வித்தியாலயம் 2024 ஆம் ஆண்டிற்கான ஆங்கில மொழி விழா நேற்று புதன்கிழமை (11) ஏறாவூர் அல் அமான் வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.எம். அமீர் தலைமையில் இடம்பெற்றது. பாடசாலையில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு ஆங்கில மொழியை ஊக்குவித்து அதனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதி கல்வி பணிப்பாளர் டீ.எம். செய்த் அஹமட் கலந்து கொண்டிருந்தார்….
அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியில் ஊடக செயலமர்வு சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ் கண்டி தெநுவர வலயத்திற்குட்பட்ட தெகியங்க அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் (தேசிய பாடசாலை) ஊடகப்பிரிவு மாணவர்கள் மற்றும் உயர்தர மாணவர்களுக்கான ஊடக செயலமர்வு நேற்று(11) கல்லூரி பிரதான மண்டபத்தில், ஆர்.ஜே.மீடியாவலையமைப்பின் கண்டி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாத்திமா சப்னா அவர்களின் ஏற்பாட்டில், கல்லூரியின் அதிபர் எம்.மன்சூர் மபாஹிர் அவர்களின் அனுமதியுடன் பிரதி அதிபர் உஸ்மான் லெப்பை மொஹமட் ரிஸான் அவர்களின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஊடகத்துறையின் அவசியம்…
மாவடிப்பள்ளி அனர்த்ததில் உயிரிழந்த மத்ரஸா மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசினால் நிதி உதவி. (சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ் ) காரைதீவு – மாவடிப்பள்ளி வீதியில் உள்ள பாலத்தில் வெள்ள அனர்த்ததினால் உயிரிழந்த ஆறு மத்ரஸா மாணவர்களின் குடும்பங்கள் உட்பட மற்றும் மரணித்த இரண்டு குடும்பங்களுக்கு அரசினால் வழங்கப்பட்ட நிதியினை திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா வழங்கி வைத்தார். சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நேற்று (11) இடம்பெற்ற இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், கணக்காளர், செயலாளர்கள்,சம்மாந்துறை…
காத்தான்குடியில் அனர்த்த முகாமைத்துவ ஒன்றுகூடல். (எம்.பஹத் ஜுனைட்)காத்தான்குடி செய்தியாளர். காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி மற்றும் அண்மித்த பகுதிகளில் அனர்த்த நிலைமைகளின் போது களப்பணியாற்றும் சமூக நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களை ஒன்றினைக்கும் நோக்கில் அனர்த்த முகாமைத்துவ ஒன்றுகூடல் செவ்வாய்க்கிழமை (10) ஜுமைரா பீச் பெலஸ் மண்டபத்தில் நடைபெற்றது. சம்மேளனத்தின் தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.எம்.தெளபீக் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது களத்தில் நின்று சமூகப்பணியாற்றிய அமைப்புகளை ஒருங்கிணைந்து…
விவசாய அமைப்பினருடன் தாஹிர் எம்.பி கலந்துரையாடல்.!! (எஸ். சினீஸ் கான்)நிந்தவூர் செய்தியாளர். காலநிலை சீற்றத்தினால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தில் பாதிப்பிற்குள்ளான அம்பாறை மாவட்ட விவசாயிகளின் வேளாண்மை காணிகள், வாய்க்கால்கள் குறித்த பிரச்சினைக்கான தீர்வுகளை ஆராயும் நோக்கில் திங்கள்கிழமை (09) நிந்தவூர் பிரதேச சபையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றிருந்தது. இதில் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர், நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் முஹம்மட் அஸ்கி , விவசாயத் திணைக்களத்தின் நிந்தவூர் பெரும்போக உத்தியோகத்தர் ஹார்லிக் மற்றும் விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள்,…