35வது சுஹதாக்கள் தினம் இன்று ஏறாவூரில் அனுஷ்டிப்பு.

ஏறாவூரில் அப்பாவி முஸ்லீம்கள் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட 35வது சுஹதாக்கள் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. செய்தியாளர் உமர் அறபாத் . ஏறாவூரில் 1990 ம் ஆண்டு காலப்பகுதியில் புலிகளால் வெட்டியும்,சுட்டும்,கடத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்ட சுஹதாக்களின் 35வது நினைவு தினம் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது. சுஹதாக்கள் ஞாபகார்த்த பேரவையின் ஏற்பாட்டில் ஏறாவூர் நூருஸ்ஸலாம் பள்ளிவாயலில் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டு விஷேட துஆ பிராத்தனை நிகழ்வும் இன்று செவ்வாய்கிழமை சுபஹ் தொழுகையினை தொடர்ந்து இடம்பெற்றது . ஏறாவூர்…

Read More

சிநேகபூர்வ கலந்துரையாடல் .

காத்தான்குடியில் இடம்பெற்ற கலெக்டிவ் சினேகபூர்வ கலந்துரையாடல் நிகழ்வு. (எம்.பஹத் ஜுனைட்) காத்தான்குடியில் இயங்கிவரும் கலெக்டிவ் அமைப்பின் ஏற்பாட்டில் காத்தான்குடியை மையப்படுத்தி பல்வேறு மட்டங்களில் சேவையாற்றிவரும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரச, தனியார், தொண்டு நிறுவனங்களின் அதிகாரிகள், உலமாக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொது விடயங்களில் தன்னார்வத்துடன் செயற்பட்டு வரும் சகோதர சகோதரிகளின் பணிகளைக் கெளரவிக்கும் நிகழ்வும் சமூக விடயங்களில் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியத்தை மையப்படுத்தியதுமான சினேகபூர்வ சந்திப்பும் செவ்வாய்க்கிழமை(05)தாருல் அர்கம் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. அஷ்ஷேய்க் இஹ்ஸான்…

Read More

அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட தாறுஸ்ஸலாம் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் MLAM.ஹிஸ்புல்லாஹ்வின் ஏறாவூர் பிராந்திய இணைப்பாளரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான AR.பெரோஸ் தலைமையில் இன்று செவ்வாய்கிழமை இடமாற்றம் செய்யப்பட்ட புதிய அலுவலகம் திறக்கும் நிகழ்வு இடம்பெற்றது . பிரதம அதிதியாக ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் MS.நழீம் கலந்து கொண்டிருந்ததுடன் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Read More

அனர்த்த அபாய குறைப்பு தொடர்பான கலந்துரையாடல் .

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அனர்த்த அபாயக் குறைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்!! மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அனர்த்த அபாயக் குறைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலானது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம் சியாத் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் சான் பத்திரன பங்குபற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (05)இடம் பெற்றது. இதன் போது மாவட்டத்தில் அனர்த்த அபாயங்களான வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி, வெடிப்பு (CBRNE) போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கான ஆரம்பகட்ட…

Read More

ஏறாவூர் ஒருங்கிணைப்பாளராக நியமனம் .

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் MLAM ஹிஸ்புல்லாஹ்வின் ஏறாவூர் ஒருங்கிணைப்பாளராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் ஏறாவூர் நகரசபையின் முன்னாள் உறுப்பினருமான AR.பிரௌஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

Read More

போதை  ஒழிப்பு வேலைத்திட்டம் .

ஏறாவூர் ஸகாத் ஜூம்ஆ பள்ளிவாயலில் விஷேட போதை ஒழிப்பு வேலைத்திட்டம் . செய்தியாளர் உமர் அறபாத் . ஏறாவூர் பற்று ஸகாத் கிராமத்தில் அமைந்துள்ள ஸகாத் ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையினை தொடர்ந்து பள்ளிவாயல் செயலாளர் AL.அக்தார் தலைமையில் இடம்பெற்றது . இந்நிகழ்வில் ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் நிருவாகம் ,சமூகம்,சுற்றாடல் ஆகிய பிரிவுகளுக்கான பொறுப்பதிகாரி SL.சரூக்,ஏறாவூர் நகரசபை உறுப்பினர் MS.பர்ளீன் ,மீராகேணி பிரிவின் சமுர்த்தி அபிவிருத்தி…

Read More

மட்டு மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை. மட்டக்களப்பு மாவட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை!! தேசிய சமாதானப் பேரவையும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்தும் மாவட்டத்தில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான பன்மைத்துவம், நல்லிணக்கம் மற்றும் சமூக நீதி தொடர்பான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறையின் முதல் நாள் ஆரம்ப நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. நல்லிணக்க ஊக்குவிப்புத்துறை தொடர்பான பணிகளில் ஈடுபடும் அதிகாரிகளின் திறன் மேம்பாட்டை அதிகரிப்பதை…

Read More

சிறுவர் மாதிரி சந்தை.

ஏறாவூர் அல்-அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் மாதிரி விளையாட்டு சந்தை. மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் ஹிஸ்புல்லாஹ் நகர் அல் – அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் மாதிரி விளையாட்டுச் சந்தை புதன்கிழமை பாடசாலையின் அதிபர் VTM.இஸ்ஸத் தலைமையில் பாடசாலை வளாகத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது . இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக ஏறாவூர் கோட்டக் கல்வி அதிகாரி அபூல் ஹசன்,ஏறாவூர் பற்று பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் SL.முனாப்தீன் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆசிரிய…

Read More

சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று இடம்பெற்றது .

சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று (29.07.2025) செவ்வாய்கிழமை இடம்பெற்றது. சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபாவின் ஏற்பாட்டில் பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பவா தலைமையில் இந்த கூட்டம் இடம்பெற்றது. இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ் உதுமான் லெப்பை, எம்.எஸ் அப்துல் வாஸித், கவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல். மாஹிர், பிரதேச சபை உறுப்பினர்கள் , முப்படையினர், திணைக்களங்களின் உயர்…

Read More

கடற்கரை சிரமதானம்.

இராணுவத்தின் ஏற்பாட்டில் “Bech Clean Up” பாசிக்குடா கடற்கரையில் மாபெரும் சிரமதானம். இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் “Bech Clean Up” பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும் மாபெரும் சிரமதானப்பணி இன்று 29.07.2025ம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 7 மணி முதல் நண்பகல் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜனக பல்லேகும்புற தலைமையில் “கழிவுகளற்ற கடற்கரை” எனும் தொனிப்பொருளில் இராணுவத்தினரின் முழு ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இச்சிரமதானப்பணியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே.முரளிதரன், இராணுவ…

Read More
Back To Top