Umar Arafath

மறைந்த  ஊடகவியலாளர் காத்தான்குடி புவி றஹ்மத்துல்லாஹ்வுக்கு சிறிலங்கா மீடியா போரம் அனுதாபம்.

துணிச்சல்மிக்க ஊடகத்துறைக்கு முன்மாதிரியாக விளங்கியவர் புவி ரஹ்மதுல்லாஹ். ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம் வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான புவி ரஹ்மதுல்லாஹ் அவர்களது மரணம் ஊடகத்துறையில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. காத்தான்குடி பிரதேசத்தை மையப்படுத்தி அவர் வெளியிட்ட “வார உரைகல்” பத்திரிகை அப்பிரதேசத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியதை நாமறிவோம். ஊழல் மோசடிகளுக்கெதிராகவும் அநியாயத்தை தட்டிக் கேட்பதிலும் அவர் மிகுந்த நெஞ்சுரத்துடன் செயற்பட்டார். வயதான காலப்பகுதியில் கூட செய்திகளை சேகரித்தல்,…

Read More

ஆசிரியர்களுக்கான வான்மை விருத்தி கருத்தரங்கு.

அரபுக் கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்களுக்கான வான்மை விருத்திக் கருத்தரங்கு. நூருல் ஹுதா உமர் அம்பாரை மாவட்ட அரபுக் கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் இஸ்லாம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வான்மை விருத்திக் கருத்தரங்கு முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சிச் செயல் முன்னணி மற்றும் “டயகோனியா” அமைப்புக்களின் அனுசரணையில் கல்முனை கமு /கமு/இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய ஸ்மார்ட் வகுப்பறையில் இன்றுஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சிச் செயல் முன்னணியின் திட்ட இணைப்பாளர் ஏ.ஜீ.எம். றிசாத் அவர்களின் ஏற்பாட்டிலும்,…

Read More

புதிய பொலிஸ் மாஅதிபர் ஜனாதிபதியை சந்தித்தார் .

ஜனாதிபதி – புதிய பொலிஸ் மாஅதிபர் சந்திப்பு புதிய பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தார். புதிய பொலிஸ் மாஅதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத்தெரிவித்ததோடு, ஜனாதிபதிக்கு அவர் நினைவுப்பரிசொன்றையும் வழங்கினார். சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இலங்கை பொலிஸின் 37வது பொலிஸ்மா அதிபராவார். இலங்கை பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஆகிய மூன்று நிலைகளையும் கடந்து பொலிஸ் மாஅதிபர் பதவிக்கு தெரிவான…

Read More

யூ.எல்.தாவூத் வித்தியாலயத்திற்கு பொருட்கள் வழங்கி வைப்பு.

ஏறாவூர் பற்று ஸகாத் கிராமத்தில் அமைந்துள்ள யூ.எல்.தாவூத் வித்தியாலய நிருவாகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் SL.முனாப்தீன் அவர்களினால் ஒரு தொகுதி காகித பொருட்கள் செவ்வாய்கிழமை  அன்று பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

Read More

வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து ஒருவர் மரணம் .

மண் அகழ்வுக்கு வெட்டப்பட்ட குழியில் மூழ்கி குடும்பஸ்தர் பலி ஏறாவூர் நஸீர் (ISD) மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான், காரைக்காடு பிரதேசத்தில்சட்டவிரோத மணல் அகழ்வாளர்களினால் தோண்டப்பட்ட பாரிய பள்ளத்தாக்கில் தேங்கியிருந்த நீர் நிலையில் வலை வீசி மீன் பிடிப்பதற்காக நேற்றைய தினம் (13/08) இறங்கிய இவர், ஆழமான பகுதிக்குள் தவறுதலாக சென்றதால் அதிலிருந்து மீளமுடியாமல் காணாமற்போயுள்ளார். உறவினர்களும் பொதுமக்களுமாக இணைந்து தேடுதலில் ஈடுபட்ட போது சடலமாகவே இவரை மீட்டுள்ளனர். வேப்பவெட்டுவான் – பாலர்சேனை பிரதேசத்தைச்சேர்ந்த…

Read More

35வது சுஹதாக்கள் தினம் இன்று ஏறாவூரில் அனுஷ்டிப்பு.

ஏறாவூரில் அப்பாவி முஸ்லீம்கள் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட 35வது சுஹதாக்கள் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. செய்தியாளர் உமர் அறபாத் . ஏறாவூரில் 1990 ம் ஆண்டு காலப்பகுதியில் புலிகளால் வெட்டியும்,சுட்டும்,கடத்தப்பட்டும் படுகொலை செய்யப்பட்ட சுஹதாக்களின் 35வது நினைவு தினம் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படுகிறது. சுஹதாக்கள் ஞாபகார்த்த பேரவையின் ஏற்பாட்டில் ஏறாவூர் நூருஸ்ஸலாம் பள்ளிவாயலில் குர்ஆன் ஓதி தமாம் செய்யப்பட்டு விஷேட துஆ பிராத்தனை நிகழ்வும் இன்று செவ்வாய்கிழமை சுபஹ் தொழுகையினை தொடர்ந்து இடம்பெற்றது . ஏறாவூர்…

Read More

சிநேகபூர்வ கலந்துரையாடல் .

காத்தான்குடியில் இடம்பெற்ற கலெக்டிவ் சினேகபூர்வ கலந்துரையாடல் நிகழ்வு. (எம்.பஹத் ஜுனைட்) காத்தான்குடியில் இயங்கிவரும் கலெக்டிவ் அமைப்பின் ஏற்பாட்டில் காத்தான்குடியை மையப்படுத்தி பல்வேறு மட்டங்களில் சேவையாற்றிவரும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரச, தனியார், தொண்டு நிறுவனங்களின் அதிகாரிகள், உலமாக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொது விடயங்களில் தன்னார்வத்துடன் செயற்பட்டு வரும் சகோதர சகோதரிகளின் பணிகளைக் கெளரவிக்கும் நிகழ்வும் சமூக விடயங்களில் எல்லோரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியத்தை மையப்படுத்தியதுமான சினேகபூர்வ சந்திப்பும் செவ்வாய்க்கிழமை(05)தாருல் அர்கம் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. அஷ்ஷேய்க் இஹ்ஸான்…

Read More

அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட தாறுஸ்ஸலாம் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் MLAM.ஹிஸ்புல்லாஹ்வின் ஏறாவூர் பிராந்திய இணைப்பாளரும் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான AR.பெரோஸ் தலைமையில் இன்று செவ்வாய்கிழமை இடமாற்றம் செய்யப்பட்ட புதிய அலுவலகம் திறக்கும் நிகழ்வு இடம்பெற்றது . பிரதம அதிதியாக ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் MS.நழீம் கலந்து கொண்டிருந்ததுடன் கௌரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Read More

அனர்த்த அபாய குறைப்பு தொடர்பான கலந்துரையாடல் .

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அனர்த்த அபாயக் குறைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்!! மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அனர்த்த அபாயக் குறைப்பு தொடர்பான விசேட கலந்துரையாடலானது மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எஸ்.எம் சியாத் தலைமையில் அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் சான் பத்திரன பங்குபற்றுதலுடன் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (05)இடம் பெற்றது. இதன் போது மாவட்டத்தில் அனர்த்த அபாயங்களான வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி, வெடிப்பு (CBRNE) போன்றவற்றினால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கான ஆரம்பகட்ட…

Read More

ஏறாவூர் ஒருங்கிணைப்பாளராக நியமனம் .

மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் MLAM ஹிஸ்புல்லாஹ்வின் ஏறாவூர் ஒருங்கிணைப்பாளராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் ஏறாவூர் நகரசபையின் முன்னாள் உறுப்பினருமான AR.பிரௌஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வ நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

Read More
Back To Top