விமானப்படையினால் புதிய கணணி மற்றும் தகவல் தொழிநுட்ப மையம் பாடசாலைக்கு கையளிப்பு.

விமானப்படையினால் புதிய கணனி, தகவல் தொழிநுட்ப மையம் கையளிப்பு விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவையொட்டி நுவரெலியா, நானுஓயா, டெஸ்போட் (DESSFORD) தமிழ் மகா வித்தியாலயத்திற்கான புதிய கணனி மற்றும் தகவல் தொழிநுட்ப மையம் கையளிக்கப்பட்டது. இலங்கை விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவையொட்டி, விமானப்படைத்தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், விமானப்படை தகவல் தொழிநுட்பப்பிரிவினால் நுவரெலியா, நானுஓயா, டெஸ்போட் (DESSFORD) தமிழ் மகா வித்தியாலய மாணவர்களுக்காக அனைத்து வசதிகளுடன் கூடிய ஒரு புதிய கணனி…

Read More

நேர்மையாக செயற்பட்ட முச்சக்கரவண்டி சாரதிக்கு கௌரவிப்பு.

ஓட்டமாவடியில் முச்சக்கர வண்டிச்சாரதிக்கு கெளரவிப்பும் பாராட்டும் வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடியைச் சேர்ந்த முச்சக்கர வண்டிச்சாரதி முஸ்தபா இக்பால்  (28) ம் திகதி ஓட்டமாவடி மேம்பாலத்தடியில் கண்டெடுத்த 14 இலட்சம் ரூபா பெருமதியான தங்க நகையையும் 19,420/- ரூபா ரொக்கப்பணத்தையும் வாழைச்சேனை பொலிசாரிடம் ஒப்படைத்து, உரியவரிடம் கையளித்திருந்தார். இவரது நேர்மையையும் நற்பண்பையும் பாராட்டிநேற்று (29)இரவு 7.30 மணியளவில் ஓட்டமாவடி மணிக்கூட்டு கோபுர சந்திக்கருகில் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.எம்.றாசீக் தலைமையில் பொன்னாடை போர்த்தி  பாராட்டி விருது வழங்கிக்கெளரவிக்கும் நிகழ்வு…

Read More

மருதமுனையில் உயிர்தெழும் சருகுகள் நூல் வெளியீட்டு விழா.

மருதமுனையில் ‘உயிர்த்தெழும் சருகுகள்’ நூல் வெளியீட்டு விழா (நூருல் ஹுதா உமர்) மருதமுனையை சேர்ந்த சிரேஷ்ட தமிழ்ப்பாட ஆசிரியை பாத்திமா ஸூபா தல்ஹா எழுதிய “உயிர்த்தெழும் சருகுகள்” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா  (28) சனிக்கிழமை அன்றும்  மருதமுனை கலாசார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. Renge view சிறிலங்கா நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட இந்த நூல், கவிதாயினியின் இரண்டாவது கவிதைத் தொகுப்பாகும். ஏற்கனவே “சுவாசித்துக் கொண்டிருக்கிறேன்” எனும் நூலை வெளியிட்டுள்ளார். பொரியநீலாவணை புலவர்மணி சரிபுத்தீன் மகா வித்தியாலய…

Read More

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று இடம்பெற்றது .

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம். (கே.எ.ஹமீட்) அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம். அம்பாறை மாவட்ட செயலாளர் திரு. அனுபம மங்கள விக்கிரமாரச்சி அவர்களின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர்களான கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர ஆகியோரின் தலைமையில் இன்று (26.03.2026) அம்பாறை மாவட்ட செயலக ஏ.ஐ.விக்கிரம கேட்போர் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது….

Read More

மூத்த ஊடகவியலாளர் சலீமின் மறைவுக்கு சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம்.

மூத்த ஊடகவியலாள் சலீமின் மறைவிற்குமீடியா போரம் அனுதாபம் மூத்த ஊடகவியலாளரும், நிந்தவூரைச் சேர்ந்த கலை, இலக்கிய ஆளுமையுமான கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் மறைவிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. கடந்த ஜந்து தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை ஊடகத்துறையில், குறிப்பாக தமிழ் ஊடகப்பரப்பில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்தவர் ஏ.எல்.எம். சலீம். 1966ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஊடகத்துறையில் காலடி பதித்த அன்னார், இளம் தலைமுறையினரை இனங்கண்டு ஊடகவியலாளர்களாகவும் கலைஞர்களாகவும் வளர்த்தெடுத்து…

Read More

ஊடகத்துறையில் உண்மை நேர்மைக்கு நல்லதோர் அடையாளம் மர்ஹும் சலீம்.

ஊடகத்துறையில் உண்மை, நேர்மை, பொறுப்புணர்வின் அடையாளம் ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம் – அனுதாபச்செய்தியில் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் மறைவுச்செய்தி துயரத்தையும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. எனது நீண்டகால நண்பராக இருந்த அவர், ஊடகத்துறையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, உண்மை, நேர்மை மற்றும் பொறுப்புணர்வின் அடையாளமாகத் திகழ்ந்தார். 1966ம் ஆண்டிலிருந்து வீரகேசரி நாளிதழின் பிராந்திய செய்தியாளராகப் பணியாற்றியதுடன், தினபதி, சிந்தாமணி போன்ற பத்திரிகைகளிலும் தனது பணிப்பாதையைச்…

Read More

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் சலீமுக்கு அஷ்ரப் தாஹிர் எம்.பி.அனுதாபம் தெரிவிப்பு.

“நடுநிலைப்பாங்குடனும் நிதானமான சிந்தனையுடனும் விளங்கிய சிரேஷ்ட ஊடகவியலாளர் சலீம்” – அஷ்ரப் தாஹிர் எம்பி அனுதாபம். (பாறுக் ஷிஹான்) சிரேஷ்ட ஊடகவியலாளர் மர்ஹூம் சலீம் அவர்களின் மறைவு செய்தி, ஊடகத்துறையையும் சமூக நல்லிணக்கத்தை நேசிக்கும் அனைத்து உள்ளங்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் தெரிவித்துள்ளார். தமது அனுதாபச்செய்தியில் அவர் மேலும் குறிப்பிடுகையில் நடுநிலையையும் பொறுப்புணர்வையும் அடிப்படையாகக் கொண்டு செய்திகளை உருவாக்கிய மர்ஹூம் சலீம் அவர்கள், ஊடகத்துறையில் உயர்ந்த முன்னுதாரணமாக…

Read More

அம்பாறை மாவட்டத்தில் 162வது வருட  பொலிஸ் வீரர் தின நிகழ்வு.

162வது வருட பொலிஸ் வீரர் தினம் (பாறுக் ஷிஹான்) 162வது வருட பொலிஸ் வீரர் தினம் அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றதுடன், இத்தினைத்தையொட்டி பொலிஸ் திணைக்களம் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது. நிகழ்வில், மௌன அஞ்சலியைத்தொடர்ந்து பொலிஸ் கொடியேற்றப்பட்டதுடன் பொலிஸ் நினைவுத்தூபிக்கு விசேட பொலிஸ் மரியாதை நிகழ்வுகளுடன் நினைவுத் தூபிக்கு மலர் வளையம் மற்றும் மலர்க்கொத்துக்கள் வைத்து அஞ்சலி சனிக்கிழமை(21) செலுத்தப்பட்டது. குறித்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதிப்பொலிஸ் மாஅதிபர் சுஜித் வேதமுல்ல கலந்து கொண்டு…

Read More

காத்தான்குடியில் சுற்றுலா படகுச் சேவை ஆரம்பிப்பு.

காத்தான்குடி வாவிக்கரை பூங்கா மற்றும் சுற்றுலா படகுச் சேவை ஹிஸ்புல்லாஹ் எம்.பியினால் அங்குரார்ப்பணம் செய்துவைப்பு..! காத்தான்குடி நகரின் அழகையும் சுற்றுலாத் துறையின் முன்னேற்றத்தையும் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தீர்க்கதரிசனமான சிந்தனை மற்றும் வழிகாட்டலின் பேரில் உருவாக்கப்பட்ட “வாவிக்கரை பூங்கா மற்றும் சுற்றுலா படகுச் சேவை” ஞாயிற்றுக்கிழமை (22) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. காத்தான்குடி நகர சபைத் தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா…

Read More

கல்முனை பெரிய பள்ளிவாயலுக்கு பிரதி அமைச்சர் விஜயம் மேற்கொண்டார் .

கல்முனை பெரிய பள்ளிவாசலுக்கு பிரதியமைச்சர் விஜயம். (நூருல் ஹுதா உமர்) கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு சமய பண்பாட்டலுவல்கள் பிரதியமைச்சர் அஷ்ஷெய்க் முனீர் முளாப்பர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) விஜயமொன்றை மேற்கொண்டார். பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரின் விசேட அழைப்பினை ஏற்றே இவ்விஜயம் இடம்பெற்றது. விஜயத்தின் போது, பள்ளிவாசலில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள புதிய புனர்நிர்மாண மற்றும் நவீனமயமாக்கல் பணிகள் தொடர்பாக பிரதியமைச்சர் விரிவாகக்கேட்டறிந்ததுடன், அவற்றின் அவசியம் குறித்தும் கலந்துரையாடினார். மேலும், பள்ளிவாசலுக்குச் சொந்தமான வக்பு சொத்துக்களின் நிர்வாகச்செயற்பாடுகள்…

Read More
Back To Top