ஏறாவூர் மிச்நகர் இல்மா பாடசாலை வளாகத்திற்கு மண் நிரப்பப்பட்டது.

ஏறாவூர் மிச்நகர் மட்/இல்மா வித்தியாலய சமூகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பாடசாலை வளாகத்தில் வெள்ளநீர் தேங்கி நிற்கும் இடங்களுக்கு மண் போடும் வேலைத்திட்டம் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. ஏறாவூர் பற்று பிரதேச சபையின் மிச்நகர் வட்டார கௌரவ உறுப்பினர் MH. சபூர்தீன் ஹாஜியார் அவர்களின் துரித முயற்சியின் ஊடாக சபையினால் பாடசாலைக்கு 25 லோட் மண் இன்று கொட்டப்பட்டு பிரதேச சபை JCB இயந்திர உதவியுடன் செப்பனிடும் பணிகளும் இடம்பெற்றன. இதன்போது ஐயங்கேணி வட்டார கௌரவ உறுப்பினர் MSM.ஜவ்பர்,மட்…

Read More

மட்டக்களப்பில் போதைப் பொருள் தடுப்பு மாவட்ட செயற்பாட்டுச் சபைக் கூட்டம்.

மட்டக்களப்பில் போதைப் பொருள் தடுப்பு மாவட்ட செயற்பாட்டுச் சபைக் கூட்டமானது பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச குழு தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் பங்குபற்றுதலுடன் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் அவர்களின் ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (16) இன்று இடம்பெற்றது. அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களினால் நாடளாவிய ரீதியில் “முழு நாடும் ஒன்றாக”…

Read More

பாடசாலைகளுக்கு புத்தகங்கள் வழங்கிய நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் நளீர்.

(நூருல் ஹுதா உமர்) நாவிதன்வெளி கல்விக் கோட்டத்திற்குட்பட்ட மூன்று பாடசாலைகளுக்கு கற்றல் நடவடிக்கைகளுக்குத் தேவையான பாட புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டன. நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினரும், நளீர் பௌண்டஷன் தலைவருமான எம்.ஏ. நளீர் அவர்களின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. அதன்படி வீரத்திடல் அல் ஹிதாயா மகா வித்தியாலயம், சாளம்பைக்கேணி அஸ்ஸிறாஜ் மகா வித்தியாலயம் மற்றும் மத்தியமுகாம் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை ஆகிய பாடசாலைகளுக்கு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில்…

Read More

மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ஐந்து முச்சக்கர வண்டிகள் வழங்கல்.

கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட ஐந்து முச்சக்கர வண்டிகள் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (15.05.2026) வெள்ளிக்கிழமை காலை கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு எஸ். கரன் அவர்கள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. மேலும், மாவட்ட சமூக சேவை சிரேஷ்ட உத்தியோகத்தர் திரு சிவலிங்கம் (DSSO), பிரதேச…

Read More

பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கற்கை நெறி தெரிவு மற்றும் பல்கலைக்கழக விண்ணப்பம் நிரப்பும் முகாம்.

மாளிகைக்காடு செய்தியாளர் சாய்ந்தமருது மாளிகைக்காடு பல்கலைக்கழக மாணவர்கள் அமைப்பு, அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா மற்றும் சொப்டா கெயார் நிறுவனங்களின் அனுசரனையுடன் இம்முறை பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்களுக்கான கற்கை நெறி தெரிவு மற்றும் விண்ணப்பித்தல் செயன்முறை தொடர்பான வழிகாட்டலும், “பல்கலைக்கழக விண்ணப்பம் நிரப்பும் முகாமும்” நிகழ்வு 2026.05.13 அன்று காலை 9.00 மாலை 7.00 வரை சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் நடாத்தினர். இந் நிகழ்வில் பிரதம வளவாளராக சபீர் ஹமீட்…

Read More

அறபா நகர் முகைதீன் அப்துல் காதர் வித்தியாலயத்தில் மரபுரிமைச்செயற்பாடு

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கோட்டக்கல்விப் பிரிவிற்குட்பட்ட அறபா நகர் முகைதீன் அப்துல் காதர் வித்தியாலயத்தில் தரம் ஒன்று ஆசிரியை எஸ.எம.மர்ழியா அவர்களின் ஒழுங்கமைப்பில் தரம் ஒன்று மாணவர்களின் சுற்றாடல் பாடத்தில் எமது மரபுரிமை (சுதேச ஆடை -எமது நாட்டு மக்களின் தேசிய ஆடை) தொடர்பான செயற்பாடு நேற்று (14.05.2026) சிறப்பாக இடம்பெற்றது. இதில் எமது நாட்டில் வாழும் சகல இன மக்களினதும் ஆடைக்கலாசாரத்தினை பிரதிபலிக்கும் வகையில் மாணவர்களின் ஆடையமைப்பு வடிவடைக்கப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும்.

Read More

கல்குடா யங் ஸ்டாரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இரத்ததான முகாம்.

கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழகம் மீராவோடை ஜும்ஆப்பள்ளிவாயல் மற்றும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து நடாத்திய இரத்த தான முகாம்  12.05.2026ம் திகதி திங்கட்கிழமை அன்று காலை 8 மணி முதல் 5 மணி வரை மீராவோடை ஜும் ஆப்பள்ளிவாயலில் இடம்பெற்றது. வைத்தியசாலைகளில் நிலவும் குருதித்தட்டுப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில் கல்குடா யங் ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எம்.றிஸ்வின் அவர்களின் வழிகாட்டலில் பிரதித்தலைவர் ஏ.எல்.சதாம் தலைமையில் பள்ளிவாயல் நிருவாகிகளின் பங்குபற்றுதலுடன்…

Read More

தேசியத்தில் சாதனை படைத்த மட்டு.ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மாணவி.

அகில இலங்கை அஹதியா சம்மேளனம் நாடளாவிய ரீதியில் நடத்திய “அஹதியா இடைநிலை தேசிய சான்றிதழ் பரீட்சை 2025/2026” இல் ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மாணவி எஸ்.பாத்திமா ஹப்னா முதல் 10 இடங்களுக்குள் தெரிவு செய்யப்பட்டு வரலாற்றுச்சாதனை படைத்து, பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். வியத்தகு இச்சாதனையை நிலைநாட்டிய இம்மாணவிக்கு ஓட்டமாவடி அஹதியா பாடசாலை நிர்வாகம் மற்றும் அதிபர் எம்.எம்.பைஷல் ஆகியோர் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றனர். மார்க்கக்கல்வியில் இம்மாணவி காட்டிய அதீத ஆர்வமும், கடின உழைப்பும் இன்று…

Read More

சம்மாந்துறை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் இன்று நிறைவேற்றம்.

. சம்மாந்துறை பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (12) ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தலைமையில் பிரதேச செயலக கேட்போர் மண்டபத்தில் நடைபெற்றது. சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.எம் தாஹீர், எம்.எஸ் உதுமாலெப்பை, கே.கோடிஸ்வரன், எம்.எஸ் வாஸீத் மற்றும் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஐ.எல்.எம் மாஹீர், மாவட்ட பிரதம கணக்காளர் ஏ.எல் மஹ்ரூப், மாவட்ட…

Read More

ஒரு பிரதேச செயலகப்பிரிவுக்கு ஓர் இளம் ஊடகவியலாளர் நியமனம்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் பிரதேச ஊடகவியலாளர் வலையமைப்பொன்றைக் கட்டியெழுப்புவதற்காக பிரதேச செயலகப் பிரிவிற்கும் ஒரு இளைஞர் அல்லது யுவதி வீதம் தெரிவு செய்யும் வேலைத்திட்டம்  தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தெரிவு செய்யப்பட்ட இளைஞர் யுதிகளுக்காக வழங்கப்படும் பயிற்சி,உள்ளடக்கப்படும் விடயங்கள் மற்றும் பயிற்சியின் போது அவர்களுக்கு வழங்க கிடைக்கும் சந்தர்ப்பங்கள் குறித்த கலந்துரையாடல் நேற்று (11) இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில் இடம்பெற்றது. இப் பயிற்சி ஒரு துறையை மாத்திரம் வரையறுக்காது செய்திப் பத்திரிகை, தொலைக்காட்சி…

Read More
Back To Top