சுகாதார விழிப்புணர்வுக்காக சமூக ஊடகங்களை பயன்படுத்துதல் தொர்பான கலந்துரையாடல் .

சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்த சமூக ஊடகங்களை பயன்படுத்தல். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்வில் சமூக ஊடகங்கள் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகிவிட்ட நிலையில், சுகாதாரத் தகவல்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு சமூக வலைத்தளங்கள் ஒரு சக்திவாய்ந்த கருவியாகச் செயல்படுத்த முடியும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் தெரிவித்தார். “வருமுன் காப்போம்” என்ற மிக முக்கியமான சுகாதாரத் தத்துவத்திற்குப் போதிய விழிப்புணர்வை சமூக ஊடகங்கள் மூலம் மக்களுக்குக் கொண்டு…

Read More

44 வாகனங்கள் சேவையில் இருந்து நீக்கம் .

பாதுகாப்பு காரணங்களுக்காக பேருந்துகள் உட்பட 44 வாகனங்கள் சேவையிலிருந்து நீக்கம்! ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் நேற்று (19) பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட 44 வாகனங்களை சேவையிலிருந்து தற்காலிகமாக அகற்றுவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பகதொலுவ பகுதியில் இந்த வாகன சோதனைகள் நடத்தப்பட்டதுடன், அங்கு 115 வாகனங்கள் திடீர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. தரமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து சேவையைப் பராமரித்தல் மற்றும்…

Read More

இலங்கை பாராளுமன்றத்திற்கு வருகை தந்த இந்திய பிரபல மலையாள நடிகர்.

பாராளுமன்றத்திற்கு வருகை தந்த பிரபல மலையாள நடிகர் மோகன்லால். திரைப்பட படப்பிடிப்பிற்காக தற்போது இலங்கையில் வந்துள்ள பிரபல மலையாள நடிகர் மோகன்லால் விஸ்வநாதன், இலங்கை பாராளுமன்றத்துக்கு இன்று (19) வருகை தந்தார். பிரதி சபாநாயகர் சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலியின் அழைப்பிற்கு அமைய, பிரபல நடிகர் மோகன்லால் உள்ளிட்ட குழுவினரும் சபாநாயகரின் கலரியில் இருந்து பாராளுமன்ற அமர்வை பார்வையிட்டார். இந்த விஜயத்தின் போது, ​​அவர் பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன மற்றும்…

Read More

கலந்துரையாடல் .

ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். நழீம் அவர்கள் தனது கடமையை பொறுப்பேற்று நகரசபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஊழியர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார். இந்நிகழ்வில் ஏறாவூர் நகரசபையின் கௌரவ பிரதி தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள், நகரசபையின் செயலாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், வருமானப் பரிசோதகர்கள், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Read More

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக பொறுப்பேற்றார்.

கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளராக கடமையேற்ற அஸ்மி. கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசன, கால்நடை உற்பத்தி அபிவிருத்தி, மீன்பிடி, கூட்டுறவு அபிவிருத்தி உணவு வழங்கலும் விநியோகத்திற்குமான அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவை விசேட தர அதிகாரி ஏ.எல்.எம்.அஸ்மி தனது கடமையை பொறுப்பேற்றார். கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் இன்றையதினம் (17) நியமிக்கப்பட்டு விவசாய அமைச்சின் கடமைகளை உடன் செயற்படும் வண்ணம் கடமையைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இலங்கை நிர்வாக சேவையின் மூத்த அதிகாரியான ஏ.எல்.எம்.அஸ்மி,…

Read More

திருகோணமலை நிலாவெளி பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி.

நிலாவெளியில் இடம்பெற்ற விபத்தில்மாணிக்கநடராசா மரணம். திருகோணமலை -நிலாவெளி பகுதியில் இன்று (18) இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்துச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த திரியாயைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மாணிக்கநடராசா அகால மரணமடைந்துள்ளதுடன் அவரது மனைவி பலத்த காயங்களுக்கு உள்ளாகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read More

மாகாண மட்டத்திற்கு தெரிவாகினர்.

ரிதிதென்ன இக்ரஃவிலிருந்து மாகாண மட்டம் செல்லும் இரு மாணவிகள். வலய மட்ட விளையாட்டுப்போட்டியில் 16 வயதுப்பிரிவு உயரம் பாய்தலில் ரிதிதென்ன இக்ரஃ வித்தியாலய மாணவிகளான எம்.எஃப்.மன்ஸிலா முதலாமிடத்தையும் ஏ.எஃப்.அஸ்னா இரண்டாமிடத்தையும் பெற்று மாகாண மட்டப்போட்டிக்கு தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர். குறித்த மாணவிகளுக்கும் மாணவிகளுக்கு பயிற்சியளித்த ஆசிரியர்களான ஆர்.ஏ.எம்.பாஷித், ஏ.எல்.எம்.றிஸ்வாஹிதீன், மாணவிகளை போட்டி நடைபெற்ற ஏறாவூர் அஹமட் பரீட் விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச்சென்ற ஆசிரியர் ஏ.எஃப்.றிபாஸ் ஆகியோருக்கும் பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.றிஸ்மின் மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றார்.

Read More

ஏறாவூர் நகரசபையில் பதவியேற்பு.

ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர், கௌரவ பிரதி தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள் (18) புதன்கிழமை இன்று பதவியேற்றார்கள். ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். நழீம், கௌரவ பிரதி தவிசாளர் ஞானசேகரம் கஜேந்திரன், ஏறாவூர் நகரசபையின் உறுப்பினர்களான கௌரவ ஏ.எம் அஸ்மி, கௌரவ ஏ.எம் உவைஸ் அல் ஹபீழ், கௌரவ எஸ்.எம் ஜப்பார், கௌரவ எம்.ஐ.ஏ நாஸர், கௌரவ சுப்பிரமணியம் ரகுபரன், கௌரவ அசனார் சுபைதா உம்மா, ஆகியோர் ஏறாவூர் நகரசபையின் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம்…

Read More

பாசிக்குடா கடற்கரையில் பொலிசாரின் ஏற்பாட்டில் சிரமதானம்.

பாசிக்குடா கடற்கரையில் கல்குடா பொலிஸாரினால் சிரமதானம் கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செஹான் திலங்கவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் கல்குடா சுற்றுலா பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி சந்திரபால தலைமையில் கல்குடா பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப்பிரிவு பொறுப்பதிகாரி எம்.ஏ.றஹீமின் (SI) பங்குபற்றுதலோடு இன்று (18) காலை மணி முதல் பாசிக்குடா கடற்கரையில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது. இச்சிரமதானப்பணியில் சுகாதாரப்பரிசோதகர் எம்.ஜெளபர், கல்மடு, கல்குடா, கும்புறுமூலை, பேத்தாளை கிராம சேவை உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், கள நுளம்பு ஒழிப்பு உதவியாளர்…

Read More
Back To Top