போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல், விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல்,மோசடிகளை மட்டுப்பத்தல், சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதை தடுப்பது குறித்து ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்பு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனத்தின் பிரதானிகளுக்கு இடையிலான கலந்துரையாடல் இன்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத பொருட்கள் நாட்டிற்குள் வருவதை தடுத்தல்,…
ஏறாவூர் இளைஞர் ஊடக மன்றத்தின் உத்தியோகபூர்வ அலுவலகம் மன்றத்தின் தலைவரும் ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான உமர் அறபாத் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி. நிஹாரா மௌஜூத், கௌரவ அதிதியாக ஏறாவூர் நகர சபையின் விசேட ஆணையாளர் M.H.M ஹமீம், விசேட அதிதியாக இளைஞர் சேவை உத்தியோகத்தர்A.W. இர்ஷாத் அலி உட்பட மன்றத்தின் நிர்வாகிகள், பொதுச் சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். மட்டக்களப்பு மாவட்ட ரீதியாக ஊடகத்துறை கலை கலாசார சமூக நலன் திட்ட பல்வேறுபட்ட வேலை திட்டத்துடன் பயணிக்கும் ஏறாவூர் இளைஞர் ஊடக மன்றமானது கடந்த…
சுனாமி 20 ஆண்டு நிறைவை முன்னிட்டு தேசிய நிகழ்வு.
தேசிய இளைஞர் சேவை மன்றமும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையமும் இணைந்து சுனாமி பேரனர்த்த 20வது ஆண்டு நினைவை முன்னிட்டு “அடுத்த தலைமுறைக்கு உறுதியான எதிர்காலத்தை உருவாக்குதல்” எனும் தொனிப் பொருளில் தேசிய நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியில் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது. (M.N.M.அக்மல்-)செய்தியாளர். குறித்த நிகழ்வானது தேசிய இளைஞர் சேவை மன்ற மட்டக்களப்பு மாவட்ட பணிமனையின் மாவட்ட இளைஞர் சம்மேளனத் தலைவர் G.சஜிப் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி.நிஷாந்தி அருண்மொழி, அனர்த்த…
உத்தியோகபூர்வ அலுவலகம் திறப்பு .
ஏறாவூர் இளைஞர் ஊடக மன்றத்தின் உத்தியோகபூர்வ அலுவலகம் மன்றத்தின் தலைவரும் ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான உமர் அறபாத் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி. நிகாரா மௌஜூத், கௌரவ அதிதியாக ஏறாவூர் நகர சபையின் விசேட ஆணையாளர் M.H.M ஹமீம், விசேட அதிதியாக இளைஞர் சேவை உத்தியோகத்தர்A.W. இர்ஷாத் அலி உட்பட மன்றத்தின் நிர்வாகிகள், பொதுச் சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். மட்டக்களப்பு…
பொது மன்னிப்பு.
மட்டக்களப்பு சிறையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது நத்தார் பண்டிகையை முன்னிட்டு கடந்த (25) ஆம் திகதி மட்டக்களப்புசிறைச்சாலையிலிருந்து 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. சிறிய குற்றங்களுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்றவர்களுக்கு நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியினால் வழங்கப்படுகின்ற பொது மன்னிப்பின் அடிப்படையில் குறித்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 12 ஆண் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர்…
கிழக்கு மாகாண திணைக்களங்களின் புதிய தலைவர்கள் நியமனம்.
கிழக்கு மாகாண திணைக்களங்களின் புதிய தலைவர்கள் நியமனம். கிழக்கு மாகாண திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனங்களின் புதிய தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்னசேகர இன்று (27) நியமித்து அவர்களுக்கான கடிதத்தையும் வழங்கி வைத்தார். கிழக்கு மாகாண திணைக்களங்களில் தலைவர்களாக கடமையாற்றிய உத்தியோகத்தர்களுக்குளேயே இந்தப் பணியிடங்கள் மாற்றியமைத்து நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைவாக Vilvarathnam – Acting DCS AdminNadarasa Sivalingam – SAS-CM officeA.L.M.Azmi – Commissioner of Local GovernmentManivannan – IndustriesV. Raveendaran…
முன்பள்ளி பாலர் பாடசாலையின் விடுகை விழா.
அல்-குறைஷ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேற்று நிகழ்வு.!!! (எஸ். சினீஸ் கான்) பிறைந்துரைச்சேனை அல்-குறைஷ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் 24வது மாணவர் வெளியேற்று நிகழ்வு அஸ்ஹர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) நடை பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் பொறியியலாளர் எம்.எஸ். நழீம் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்குடா தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ஹபீப்…
நத்தார் தின வாழ்த்து .
மானிட சமூகத்திற்கு அன்பையும்,சமாதானத்தையும் போதிக்கும் அடையாளமாக கிறிஸ்மஸ் பண்டிகை உள்ளது! -இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கிறிஸ்மஸ் வாழ்த்து- இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது, இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க முடியாத தொடர்புகளைப் பலப்படுத்துகின்ற மகிழ்ச்சிகரமான ஒரு நன்நாளாகுமென இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சமூகத்தின் நல்வாழ்வைப் போன்று, பாவத்தின் இருளை அகற்றுவதே…
ஏறாவூர் தாருஸ்ஸலாம் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஏறாவூர் தாருஸ்ஸலாம் கிளையின் ஏற்பாட்டில் பாராளுமன்றத்திற்கு தெரிவான மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நழீம் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஏறாவூர் நகரசபையின் முன்னாள் உறுப்பினரும் இமாம் ஹஸ்ஸாலி பவுண்டேஷன் அமைப்பின் தலைவருமான ஏ.ஆர். பிரௌஸ் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை தாருஸ்ஸலாம் காரியாலயத்தில் இடம் பெற்றது இந்நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், வட்டார வேட்பாளர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், கட்சியின் மூத்த போராளிகள், ஆதரவாளர்கள்,…
சேதமடைந்த வீதிகளை புனரமைப்பு செய்யும் பணிகளை விரைவுபடுத்துங்கள்- கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை.. காத்தான்குடி நகரசபைக்கு உட்பட்ட அனர்த்தத்தினால் சேதமடைந்து காணப்படும் அனைத்து வீதிகளையும் விரைவாக புனரமைப்பு செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கே.சிவகுமார் அவர்களிடம் இன்று (23) கோரிக்கை விடுத்தார். இது தொடர்பான கூட்டம் காத்தான்குடிநகரசபை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின்…