Umar Arafath

பாராளுமன்ற ஓய்வூதியம் இரத்து.

🛑எம்.பிக்களின் ஓய்வூதியம் இரத்து – அமைச்சர் பிமல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதிய முறையை இரத்து செய்வதற்கான சட்டமூலம் அடுத்த 6 வாரங்களுக்குள் நிறைவேற்றப்படும் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். அரசியலை இலாபம் ஈட்டும் தொழிலாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதும், பொதுச் சேவையில் நேர்மையை ஊக்குவிப்பதும் இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். அத்துடன் கொழும்பில் உள்ள 4 அமைச்சர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் இனி நீதித்துறை சார்ந்த பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அரசியல்வாதிகளுக்கான வரப்பிரசாதங்களைக் குறைத்து, மக்கள் நலனை முன்னிலைப்படுத்தும் நோக்கில்…

Read More

மீரா பாலர் பாடசாலையின் வருடாந்த விடுகை விழா.

ஏறாவூர் மீரா பாலர் பாடசாலையின் வருடாந்த விடுகை விழா. ஏறாவூர் மேலதிக செய்தியாளர் . ஏறாவூரில் இரண்டு தசாப்தங்களை கடந்து பயணிக்கும் மீரா பாலர் பாடசாலையின் 2025ம் ஆண்டுக்கான விடுகை விழாவும் கலை நிகழ்ச்சியும் மீரா பாலர் பாடசாலையின் தலைவர் எஸ்.அமீன் தலைமையில் மட்/அறபா வித்தியாலய பிரதான மண்டபத்தில் சனிக்கிழமை (10/01)அன்று இடம்பெற்றது . நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஏறாவூர் நகரசபையின் தவிசாளருமான எம்.எஸ்.நழீம் கலந்து கொண்டிருந்ததுடன் கௌரவ அதிதிகளாக…

Read More

கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

அகில இலங்கை YMMA அமைப்பினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு. . அகில இலங்கை YMMA அமைப்பின் ஏற்பாட்டில் கிரஸ் பௌண்டேசன் அனுசரனையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வுமட்/அறபா வித்தியாலய பிரதான மண்டபத்தில் YMMA ஏறாவூர் கிளையின் தலைவர் எம்.எப்.எம்.பாறூக் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (11/01)இன்று இடம்பெற்றது . இந்நிகழ்வில் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் சமூகசேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சி.நஜிமுத்தின் ,ஏறாவூர் பள்ளிவாயல் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் செயலாளர்…

Read More

ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலய புதிய அதிபர் கடமையை பொறுப்பேற்றார்.

ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலய புதிய அதிபராக எம்.எல்.அன்ஸார் கடமையேற்றார் செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலய அதிபராக கடமையாற்றிய எம்.எல்.அன்ஸார் ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலய புதிய அதிபராக இன்று (01.01.2026) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். செம்மண்ணோடை அல் ஹம்றா வித்தியாலயத்தில் நீண்டகாலமாக கடமையாற்றிய எம்.எல்.அன்ஸார் பாடசாலையின் கல்வி மற்றும் பெளதீக வளர்ச்சிக்கு பிரதேச மட்ட அமைப்புக்களுடன் இணைந்து பல்வேறு முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருந்தார். இந்நிகழ்வில் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

Read More

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக ஆண்டின் முதல் நாள் நிகழ்வு.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் முதல் நாள் நிகழ்வு ஏ.சி.எம்.ருமைஸ் மலர்ந்திருக்கும் 2026ம் ஆண்டின் ஆங்கில புது வருடத்தினை வரவேற்று கடமைகளை ஆரம்பிக்கும் முதல் நாள் ஆரம்ப நிகழ்வு கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று (2026.01.01) இடம்பெற்றது. கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் ஏ.ஜுமானா ஹஸீன், கணக்காளர் எம்.ஐ.எஸ்.சஜ்ஜாத், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஐ.என்.ஸாஹித், நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஏ.எம்..தாஹிர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.எல்.ஏ.மஜீத்…

Read More

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது.

ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது. பாறுக் ஷிஹான். பல பிடியாணைகளுடன் தேடப்பட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர்ப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 2 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்மாந்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், சந்தேக நபர்கள் வசமிருந்து 4 கிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்த்கக்கது இதன்போது, கைது செய்யப்பட்ட…

Read More

நிபந்தனைகள் மீறினால் தொலைக்காட்சி அலைவரிசை அனுமதிப்பத்திரம் இரத்து

நிபந்தனைகள் மீறினால் தொலைக்காட்சி அலைவரிசை அனுமதிப்பத்திரம் இரத்து. ஊடக அமைச்சர் தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான ஒளிபரப்பு அனுமதிப்பத்திரங்கள் ஊடக அமைச்சினால் குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டே வழங்கப்பட்டுள்ளதாகவும், அந்த நிபந்தனைகள் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் மீறப்பட்டால், சம்பந்தப்பட்ட அலைவரிசைகளின் அனுமதிப்பத்திரத்தைத் திரும்பப் பெறும் அதிகாரம் ஊடக அமைச்சருக்கு இருப்பதாகவும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மக்களின் சுகாதார அறிவை மேம்படுத்துவதற்காகவும் சுகாதாரத் தகவல்களைப் பரப்புவதற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஊடகவியலாளர்களின் பணியைப் பாராட்டுவதற்காக சுகாதார மேம்பாட்டுப்…

Read More

ஏறாவூர் கிட்ஸ் கொலேஜ் வருடாந்த விடுகை விழா.

ஏறாவூர் கிட்ஸ் கல்லூரியின் வருடாந்த விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும். செய்தியாளர் உமர் அறபாத் . ஏறாவூர் கிட்ஸ் கொலேஜ் கின்டர் கார்டனின் 2025ம் ஆண்டுக்கான விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் மட்/ அறபா வித்தியாலய அதிபர் எம்.எல்.பதியுதீன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை அன்று காலை அறபா வித்தியாலய பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது . நிகழ்வின் பிரதம அதிதியாக வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி ஏ.ஜுமானா ஹஸீன் கலந்து…

Read More

பிரஜா சக்தி தெளிவூட்டல் செயலமர்வு.

கோறளைப்பற்று மேற்கு, மத்தியில் ‘பிரஜா சக்தி’ தெளிவூட்டல் செயலமர்வு. (ஏ.சி.எம்.ருமைஸ்) கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை மற்றும் கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ‘பிரஜா சக்தி’ தேசிய வறுமையொழிப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தலைவர்கள், செயலாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோர்களுக்கான தெளிவூட்டல் செயலமர்வு  (23) செவ்வாய்க்கிழமை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. கோறளைப்பற்று மத்தி, பிரதேச செயலாளர் எம்.பி.எம்.முபாறக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரஜா சக்தி நிகழ்ச்சித் திட்டத்திற்கான தெளிவூட்டல் செயலமர்வின் வளவாளர்களாக சமூக…

Read More

ஏறாவூர் நகர் பிரதேச செயலக கிராம சேவகர் பிரிவுக்கான பிரஜா சக்தி தலைவர்களுக்கான நியமனம் வழங்கி வைப்பு.

ஏறாவூர் நகர் பிரதேச செயலக கிராம சேவகர் பிரிவுகளுக்கான பிரஜா சக்தி வேலைத்திட்டத்தின் தலைவர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு. ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் கீழ் காணப்படும் 15 கிராம சேவகர் பிரிவுகளுக்கான சமுதாய அபிவிருத்தி(பிரஜா சக்தி) சபைத் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு 11/12/2025 வியாழக்கிழமை இன்று ஏறாவூர் நகர் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் SH.முஸம்மில் தலைமையில் இடம்பெற்றது . இந்நிகழ்வுக்கு தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற…

Read More
Back To Top