ஜனாபதிக்கு மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது .
ஜெர்மனி பெர்லினின் பெல்வீவ் மாளிகையில் ஜனாதிபதிக்கு அரச மரியாதையுடன் வரவேற்பு…
ஜெர்மனி பெர்லினின் பெல்வீவ் மாளிகையில் ஜனாதிபதிக்கு அரச மரியாதையுடன் வரவேற்பு…
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகத்தின் இஸ்லாமிய மத ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக பொலனறுவை கதுருவெல முஸ்லிம் கொலனியைப் பிறப்பிடமாகவும் ஓட்டமாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட கல்குடாவின் கல்வியலாளர்களில் ஒருவரான கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி (மஜீதி)B.A.(Hons), PGDE, CTHE, M.A., M.Phil, PhD (Rd)அவர்கள் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான நியமனத்தை இன்று (11.06.2025) கல்வியமைச்சில் இடம்பெற்று நிகழ்வின் போது பிரதமரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்குழுத் தலைவரின் அலுவலகம் புதிய மாவட்ட செயலகத்தில் திறந்து வைப்பு. அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் காரியாலயம் இன்றைய தினம் மட்டக்களப்பு திராய்மடுவிலுள்ள புதிய மாவட்ட செயலக கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணப்புக்குழுத் தலைவராக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டதனைத்தொடர்ந்து இன்று அவரது தலைமையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து, மாவட்ட செயலாளர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் அவர்களது…
மட்டக்களப்பு மாவட்ட மாவட்டத்தில் ஒருங்கிணப்புக் குழு கூட்டம், ஒருங்கிணைப்புக் குழு தலைவர் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியான்மை அபிவிருத்தி அமைச்சரும் பாரளுமன்ற உறுப்பினருமாகிய சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் அவர்களது ஏற்பாட்டில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (11) இடம்பெற்றது. கிழக்கு மாகாண ஆளுநரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி எம்.எல்.ஏ.எம்…
பதில் அமைச்சர்கள் நியமனம். ஜெர்மன் ஜனாதிபதி பிராங்க்-வால்டர் ஸ்டெய்ன்மியரின் (Frank-Walter Steinmeier) அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதன் காரணமாக, 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுகளுக்கும், அமைச்சர் விஜித ஹேரத்தின் கீழ் உள்ள வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சிற்கும்…
மட்டு மாநகர சபை மேயராக சிவம் பாக்கியநாதன். மட்டக்களப்பு .மாநகர சபை மேயர் தெரிவு கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு அஸ்மி அவர்களின் தலைமையில் மாநகர சபை சபா மண்டபத்தில் 11.06.2015 காலை 08.40 மணிக்கு இடம்பெற்றது. இலங்கைத் தமிழரசுக்கட்சியைச் சேர்ந்த சிவம் பாக்கியநாதன் அவர்களை அதே கட்சியைச்சேர்ந்த கௌரவ மாசிலாமணி சண்முகலிங்கம் முன்மொழிய ஐக்கிய மக்கள் சக்தியைச்சேர்ந்த கௌரவ நவரெத்தினராசா ரகுபரன் வழிமொழிய வேறு தெரிவுகளின்மையால் அவர் ஏகமனதாக மட்டு மாநகர சபை முதல்வராகத்தெரிவு…
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஏறாவூர் நகரசபை மற்றும் ஏறாவூர் பற்று பிரதேச சபைகளுக்கு தெரிவான உறுப்பினர்களின் சத்திய பிரமாண நிகழ்வு இன்று ஏறாவூரில் இடம்பெற்றது . சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதி தலைவர் முன்னிலையில் தெரிவு செய்யப்பட்ட கௌரவ உறுப்பினர்கள் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர் .
ஏறாவூர் மிச்நகர் தாமரைக்கேணியில் உள்ள பழைய இரும்பு கடையில் இன்று காலை பாரிய தீ பரவல் ஏற்பட்டது . மட்டக்களப்பு மாநகரசபை தீயணைப்பு பிரிவு மற்றும் ஏறாவூர் நகரசபை ,பிரதேச பொதுமக்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது . தீயினால் பெரும் தொகையான பொருட்களும் சேதமடைந்து உள்ளன. தீ பரவல் குறித்துஏறாவூர் பொலிசார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
சிறுவன் ஜனாஷாவாக மீட்கப்பட்டார். காலையில் காணமற்போயிருந்த காத்தான்குடி-5 ஐச்சேர்ந்த சிறுவன் காத்தான்குடி குபா பள்ளி வாவி பகுதியில் சற்று முன்னர் ஜனாஸாவாக மீட்கப்பட்டார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன் இவர் காத்தான்குடி 5ம் குறிச்சி ஊர் வீதியைச்சேர்ந்த நகர சபை உத்தியோகத்தர் அனஸ் அவர்களின் மகனும் மர்ஹூம் சாஹிறாஸ் இஸ்மாயில் அவர்களின் பேரனுமாவார். காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏறாவூர் அல் மர்கஸுல் இஸ்லாமி ஜூம்மா பள்ளிவாயலின் ஏற்பாட்டில் ஹஜ்ஜூப் பெருநாள் திடல் தொழுகை அலிகார் தேசிய பாடசாலை மைதானத்தில் இன்று இடம்பெற்றது . பெருநாள் தொழுகை பேருரையை ARM.றிஸ்வான்(ஷர்கி) நிகழ்த்தினார்.