கண்டன அறிக்கை.

ஊடகவியலாளர்மப்ரூக்மீதான #தாக்குதலை ஸ்ரீலங்காமுஸ்லிம் மீடியாபோரம்கண்டிக்கிறது சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினருமான யூ.எல். மப்ரூக் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது. மப்ரூக், ஜூலை 2ஆம் திகதி புதன்கிழமை இரவு அட்டாளைச்சேனைப் பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதியினால். “என்னைப் பற்றி எப்படி கதை எழுதுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பி ஊடகவியலாளர் தாக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது, மேலும் இது குறித்து போலீஸ் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை ஊடகவியலாளர்களின் பணிக்கு நேரடியான அச்சுறுத்தலாக இருப்பதுடன்…

Read More

போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவணியும், வீதி நாடகமும். தேசிய போதை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு சம்பூர் பொலிஸாரின் ஏற்பாட்டில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நடைபவணியும் ,வீதி நாடகமும் இன்று புதன்கிழமை (02) இடம்பெற்றது. இதன்போது சேனையூர் இந்துக் கல்லூரி, கட்டைபறிச்சான் விபுலானந்தா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்ட மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியிருந்ததோடு கோசங்களையும் எழுப்பி பேரணியாகச் சென்றனர். அத்தோடு…

Read More

பட்டா ரக வாகனம் விபத்துள்ளாகியது.

வவுனியாவில் இருந்து மூதூர் நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் திருகோணமலை – அனுராதபுரம் வீதியின் வெல்வேரியை அண்மித்த பகுதியில் பாதையை விட்டு விலகி சற்று முன்னர் விபத்துக்கள்ளாகியுள்ளது.

Read More

மட்டு மாவட்ட  மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து கலந்துரையாடல் .

மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைக்கு தீர்வுகான விசேட கலந்துரையாடல்!! மட்டக்களப்பு மாவட்ட ஆள் கடல் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நேற்று மட்டக்களப்பில் இடம் பெற்றது. மட்டக்களப்பு மாவட்டகடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் றுக்சான் குருஸ் அவர்களது ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் மாவட்ட அலுவலகத்தில் இடம் பெற்ற கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமாகிய திருமதி.ஜஸ்டினா முரளிதரன், கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்…

Read More

மட்டு.களுவன்கேணியில் விபத்து.

மட்டக்களப்பு களுவன்கேணி அதிசொகுசு கார் விபத்தில் 15 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு. மட்டக்களப்பு கருவப்பங்கேணியில் இருந்து ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுவன்கேணி நோக்கி பயணித்த அதிசொகுசு கார் களுவன்கேணி புகையிரத கடவைக்கு அருகாமையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துள்ளாகியதில் காரை செலுத்திய சாரதி உட்பட 15 வயது சிறுமி என இருவர் உயிரிழந்ததுடன் தாயும் படுகாயம் அடைந்து மட்/போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். உயிரிழந்தவர்கள் மட்டக்களப்பு சின்ன ஊறனியை சேர்ந்த 25 வயதுடைய…

Read More

“கிராமிய பாதை அபிவிருத்தி திட்டம்” எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் கிராம வீதிகளை அபிவிருத்தி செய்யும் செயல் திட்டமானது நேற்றைய தினம் (21) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் கும்பிலாமடு வீதியினை கொங்கிரீட் வீதியாக மாற்றும் வேலை திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த வகையில் வீதியின் ஆரம்ப வேலைகளை ஆரம்பிக்கும் முகமாக வீதிக்கான அடிக்கல் வைக்கும் நிகழ்வு கிராம அபிவிருத்தி சங்க ஒத்துழைப்புடன் வீதி அபிவிருத்தி அதிகார…

Read More

யாசகர்கள் அற்ற மட்டக்களப்பு: ஒரு புதிய அத்தியாத்தின் தொடக்கம் ! மட்டக்களப்பு மாவட்டத்தை யாசகர்கள் அற்ற பிரதேசமாக மாற்றும் மகத்தான நோக்குடன், வீதிகளில் வசிப்போருக்கும், நீண்டகாலமாக மனநலப் பாதிப்பினால் வீடற்ற நிலையில் உள்ளவர்களுக்கும் நிரந்தரத் தீர்வுகளை வழங்கும் புதிய திட்டம் குறித்த முக்கிய கலந்துரையாடல் ஒன்று மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது. 17.06.2025 ஆம் திகதி செவ்வாய்கிழமையன்று, உதவி மாவட்டச் செயலாளர் திருமதி. எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலை, #மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள்…

Read More

சுகாதார விழிப்புணர்வுக்காக சமூக ஊடகங்களை பயன்படுத்துதல் தொர்பான கலந்துரையாடல் .

சுகாதார விழிப்புணர்வை மேம்படுத்த சமூக ஊடகங்களை பயன்படுத்தல். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்களின் அன்றாட வாழ்வில் சமூக ஊடகங்கள் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாகிவிட்ட நிலையில், சுகாதாரத் தகவல்களை மக்களிடம் கொண்டு செல்வதற்கு சமூக வலைத்தளங்கள் ஒரு சக்திவாய்ந்த கருவியாகச் செயல்படுத்த முடியும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. ஆர். முரளீஸ்வரன் தெரிவித்தார். “வருமுன் காப்போம்” என்ற மிக முக்கியமான சுகாதாரத் தத்துவத்திற்குப் போதிய விழிப்புணர்வை சமூக ஊடகங்கள் மூலம் மக்களுக்குக் கொண்டு…

Read More

44 வாகனங்கள் சேவையில் இருந்து நீக்கம் .

பாதுகாப்பு காரணங்களுக்காக பேருந்துகள் உட்பட 44 வாகனங்கள் சேவையிலிருந்து நீக்கம்! ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் நேற்று (19) பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் உட்பட 44 வாகனங்களை சேவையிலிருந்து தற்காலிகமாக அகற்றுவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பகதொலுவ பகுதியில் இந்த வாகன சோதனைகள் நடத்தப்பட்டதுடன், அங்கு 115 வாகனங்கள் திடீர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. தரமான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து சேவையைப் பராமரித்தல் மற்றும்…

Read More
Back To Top