மட்டக்களப்பு குற்றத்தடுப்பு அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு அலுவலகம் மட்டுநகரில் திறந்து வைப்பு  பொறுப்பதிகாரியாக IP மேனன் நியமனம். கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவின் கிழக்கு மாகாண அலுவலகம் மட்டக்களப்பில் உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டு நேற்று திறந்து வைக்கப்பட்டது. பதில் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீயசூரயவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் கிழக்குமாகாண சிரேஸ்ர பிரதி பொலிஸ்மா அதிபர் வர்ண ஜெசுந்தரவும் கலந்துகொண்டார். கிழக்கு மாகாண குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரியாக பொலிஸ் பரிசோதகர் தெய்வநாயகம் மேனன் பதில் பொலிஸ் மா…

Read More

சத்தியபிரமாண நிகழ்வு.

காத்தான்குடி நகர சபைக்கு தெரிவாகிய உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு. (எம்.பஹத் ஜுனைட்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி சார்பில் காத்தான்குடி நகரசபைக்கு தெரிவாகிய நகர முதல்வர், பிரதி நகர முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் , மண்முனைப் பற்று பிரதேச சபைக்கு தெரிவான ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர், சுயேட்சை குழு உறுப்பினர் ஆகியோருக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (01) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது. நகர சபை முதல்வர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் இடம்பெற்ற…

Read More

மாபெரும் இரத்த தான முகாம்.

உதவும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சிறப்பாக நடைபெற்ற மாபெரும் இரத்த தான முகாம்.. (எம்.பஹ்த் ஜுனைட்) காத்தான்குடி தள வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை என்பவற்றில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு காத்தான்குடி குபா ஜும்ஆப் பள்ளிவாயல் மற்றும் காத்தான்குடி உதவுங் கரங்கள் அமைப்பு என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்த மாபெரும் இரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை(01) உதவும் கரங்கள் அமைப்பின் தலைவர் ஏ.எஸ்.ஏ.ஜவ்ஸகி தலமையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது. காத்தான்குடி குபா ஜும்ஆப்…

Read More

ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிப்பு.

ஏறாவூர் ஜயங்கேணி மஸ்ஜிதுல் ஸலாம் பள்ளிவாயலுக்கு 5 இலட்சம் பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்கள் இன்று கையளிக்கப்பட்டது. செய்தியாளர் உமர் அறபாத் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் றிசாட் பதியுதீன் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஏறாவூர் ஐயங்கேணி மஸ்ஜிதுல் சலாம் பள்ளிவாயலுக்கு 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்கள் மற்றும் மின்விசிறிகள் கொள்வனவு செய்யப்பட்டன. கொள்வனவு செய்யப்பட்ட ஒலிபெருக்கி சாதனங்கள் மற்றும் மின்விசிறிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு…

Read More

தேன் பூச்சியின் தாக்குதலால் 63 பேர் வைத்தியசாலையில் அனுமதி.

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்திற்குள் இன்று (30) பாடசாலை சென்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேன் பூச்சிகள் துரத்தி துரத்தி குத்தியதில் 63 பேர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விளையாட்டு போட்டிகள் ஏற்பாடாகிய நிலையில் திடீரென தேன்பூச்சிகள் கலைந்து பாடசாலை, மைதானத்தில் நின்றவர்களை குத்தியுள்ளது.

Read More

பலத்த காற்றின் பாதிப்பினல் இரண்டு பேர் வைத்தியசாலையில் அனுமதி .

ஓட்டமாவடியில் பலத்த காற்று கணவன், மனைவி காயங்களுடன் வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை மாலை ஏற்பட்ட பலத்த காற்றின் காரணமாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் மூத்தவன் போடியார் வீதியில் வீட்டின் கூரை காற்றினால் அடித்துச்செல்லப்பட்டு முன்னாலுள்ள வீட்டின் மீது விழுந்துள்ளது. இதன் காரணமாக வீட்டிலிருந்த கணவன் மற்றும் மனைவி இருவர் காயமடைந்துள்ளனர். இதில் தலையில் பலத்த காயங்களுக்குள்ளான 66 வயதுடைய சீனி முஹம்மது செய்லத்தும்மா என்பவர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா…

Read More

விஷேட துரித பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவு .

ஆங்காங்கே நடைபெறும் குற்றங்களை தடுக்க விஷேட துரித-பிரதிவினை பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவு ஆரம்பம்! தென் மாகாணத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் துப்பாக்கி வன்முறைகளுக்கு துரிதமாக பதிலளிக்கும் வகையில், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத் தலைமையில் விசேட மோட்டார் சைக்கிள் பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு, குற்றங்களில் இருந்து தப்பிச் செல்லும் சந்தேக நபர்களை, குறிப்பாக துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களில், விரைவான பதில் மிகவும் அவசியமான நிலையில், அவர்களை விரைவாக கண்டறிந்து கைது…

Read More

திஹாறிய அல் அஸ்ஹர் கல்லூரியில் முன்மாதிரியான பாட வகுப்பு திட்டம் .

திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் ESDS மூலம் வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட முற்றிலும் இலவச விஞ்ஞான பாடத்திட்டம்.( 2nd Batch) திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியானது மேல் மாகாணம் கம்பஹா மாவட்டில் அமையப் பெற்றுள்ள பிரபல பாடசாலைகளிள் ஒன்றாகும்.இப்பாடசாலை சுமார் 123 வருட வரலாற்றை கொண்ட பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்று பல மாணவர்கள் சாதாரண தரத்தில் நல்ல பெறுப்பேற்றை பெற்று உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவை தேர்ந்தெடுக்க விரும்பினாலும், பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு…

Read More

அநுராதபுரத்தில் வாவியில் விழுந்த முச்சக்கரவண்டி.

அநுராதபுரத்தில் வீசிய பலத்த காற்று காரணமாக, திஸ்ஸ வாவிக்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வாவிக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது. இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்றுள்ளது. பிரதேசவாசிகள், உயிர்காப்பு பிரிவினர் இணைந்து முச்சக்கரவண்டியை மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

Read More
Back To Top