இ.தொ.காங்கிரஸ் தலைவரின் மகளிர் தின வாழ்த்து செய்தி.

பெண்கள் நினைத்தால் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும்! -செந்தில் தொண்டமான் மகளிர் தின வாழ்த்து- இந்நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சிக்கு முன்பும் பின்பும் பெண்கள் இருக்கிறார்கள். பன்முக திறமைகள் கொண்ட பெண்கள் இந்த சமுதாயத்தில் ‌உருவாக்கிய‌‌ மாற்றங்கள் அதிகம். பெண்களுக்கான சம உரிமை மற்றும் பொருளாதார சுதந்திரமே ஒரு சமூகத்தின் வெற்றியாக பார்க்கப்படுகிறது என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துடன், அனைத்து துறைகளிலும் வெற்றி நடைபோடும் அனைத்து மகளிருக்கும் தன்னுடைய இனிய…

Read More

சம்மாந்துறையில் கசிப்புடன் கைதான சந்தேக நபரிடம் விசாரணை .

கசிப்புடன் கைதான சந்தேக நபரிடம் விசாரணை 2,8500 மில்லி லீற்றர் கசிப்புடன் கைதான சந்தேக நபரான இளைஞனிடம் மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் கசிப்புடன் இன்று 26 வயதுடைய சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்புப்பிரிவினர் கைது செய்திருந்தனர். கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலின் அடிப்படையில் கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என்.நிசாந்த பிரதீப் குமாரவின் ஆலோசனைக்கமைய மேற்கொள்ளப்பட்ட…

Read More

சுகாதாரமற்ற உணவு வழங்கிய கடை உரிமையாளருக்கு 15000 ரூபாய் அபராதம் .

சம்மாந்துறையில் சுகாதாரமற்ற உணவு வழங்கிய கடை உரிமையாளருக்கு ரூ.15,000 அபராதம்.!! சம்மாந்துறை கல்லரிச்சல் பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டுடன் உணவு வழங்கிய கடை உரிமையாளருக்கு எதிராக 13 மாதங்களுக்கு மேலாக நீடித்த சட்டப் போராட்டத்தின் பின்னர் நேற்று (06) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் தீர்ப்பு வழங்கப்பட்டு ரூபாய் 15,000 அபராதம் விதிக்கப்பட்டது. கடந்த 2025 பெப்ரவரி 02 ஆம் திகதி, சம்மாந்துறை கல்லரிச்சல் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட சங்க ஒன்றுகூடலில் வழங்கப்பட்ட இரவு விருந்தில் பரிமாறப்பட்ட பொரித்த…

Read More

வாழைச்சேனை கடதாசி ஆலையின் இப்தார் நிகழ்வு.

வாழைச்சேனை கடதாசி ஆலையின் இப்தார் நிகழ்வு. வாழைச்சேனை கடதாசி ஆலையின் இப்தார் நிகழ்வு நேற்று 06.03.2026 அதன் தலைவர் உப்பாலி ரட்நாயக்க தலைமையில் ஆலையின் மண்டபத்தில் இடம்பெற்றது. நீண்ட வரலாற்றினைக்கொண்ட குறித்த கடதாசி உற்பத்தி நிலையமானது கடந்தகால அரசாங்க காலகட்டத்தில் முற்றிலும் சேதமடைந்த நிலையில் இயங்கு நிலையற்று காணப்பட்டது. தேசிய மக்கள் சக்தி அரசு நாட்டினை பொறுப்பேற்றதற்கு பிற்பாடு கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் வழிகாட்டலில் மீண்டும் தலைவர் உப்பாலி ரட்நாயக்கவின் நிருவாகத்தின் கீழ் உற்பத்தியினை ஆரம்பித்து…

Read More

ஏறாவூர் நகரசபையில் முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்திட்டம்.

ஏறாவூர் நகரசபையில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்டம் ஏறாவூர் நகரசபையில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயல் திட்டம்“ ஏறாவூர் நகரசபை தவிசாளர் எம்.எஸ்.நளீம் அவர்களின் தலைமையில் நகர சபை மண்டபத்தில்  (05)திகதி அன்று  நடைபெற்றது. அதிமேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் ஒர் அங்கமாக மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் எஸ்.எச் முசம்மில் அவர்களின்…

Read More

பாரம்பரிய உணவு விற்பனை நிலையம் சின்ன முகத்துவார பகுதியில் திறந்து வைப்பு.

பாரம்பரிய உணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைள் அமைச்சின் 2.4 மில்லியன் நிதியொதுக்கீட்டில் ஆலயடிவேம்பு பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சின்னமுகத்துவாரப்பகுதியில் எமது முன்னோர்களின் பாரம்பரிய உணவுகளை விற்பனை செய்யும் விற்பனை நிலையம் நேற்று (01) ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட கரையோரப்பிரதேச ஒருங்கிணைப்பு குழுத்தலைவரும், அரசியல் பேரவை உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா பிரதம அதிதியாகக்கலந்து சிறப்பித்ததோடு, ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ், ஆலயடிவேம்பு தேசிய…

Read More

ஹிஸ்புல்லாஹ் எம்.பி. ஊடாக பேரீத்தம்பழங்கள் வழங்கி வைப்பு.

ஹிஸ்புல்லாஹ் எம்.பி யினால் பேரீச்சம் பழம் வழங்கிவைப்பு..! புனித ரமழான் மாதத்தினை சிறப்பிக்கும் வகையில் ஸ்ரீலங்கா ஹிரா பவுண்டேஷன் ஏற்பாட்டில், இலங்கையில் உள்ள பள்ளிவாயல்கள், மதரஸாக்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு பேரீச்சம் பழம் வழங்கி வைக்கும் ஆரம்ப நிகழ்வு, ஹிரா பவுண்டேஷன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் தலைமையில் கடந்த (27)ம் திகதி அன்று நடைபெற்றது. இந்நிகழ்வு, காத்தான்குடி அல் அக்ஸா பெரிய ஜும்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் காத்தான்குடி…

Read More

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் கல்முனை பொலிஸ் ஆலோசனை குழுவுடன் சந்திப்பு.

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா.அதிபர் சுஜித் வெதமுல்ல கல்முனை பொலிஸ் ஆலோசனை குழுவுடன் சந்திப்பு இன நல்லிணக்கம், பொதுமக்கள் தொடர்பு, போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட செயற்பாடுகளை சிறப்பாக முன்னெடுத்ததற்காக, அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா.அதிபர் சுஜித் வெதமுல்ல அவர்களுக்கு கல்முனை தலைமையக பொலிஸ் ஆலோசனை குழுவின் பொதுச் செயலாளர் எம்.ஐ.எம் ஜிப்ரி மற்றும் குழு உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவம் வழங்கினர். ஞாயிற்றுக்கிழமை (22) மாலை கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்,…

Read More

நிந்தவூரில்  கடலரிப்பு பாதிப்பு.

பாரிய கடலனர்த்தப்பாதிப்பு – ஆதம்பாவா எம்பி நேரில் பார்வையிட்டு, துரித பாதுகாப்பு நடவடிக்கை. நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடல் அனர்த்தம் காரணமாக அப்பிரதேசத்தில் உள்ள அதிகமான பொதுமக்களின் காணி மற்றும் தென்னந்தோப்புகள் கடலுக்குள் சென்று விட்டன. அதில் ஒருவரின் 5 ஏக்கர் காணி முற்றாக கடலிலுக்குள் காவு கொள்ளப்பட்டுவிட்டது. இதன் காரணமாக அந்த பிரதேச தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் வேண்டிக் கொண்டதிற்கிணங்க, நேற்று (23) திங்கட்கிழமை மாலை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,…

Read More

வாழைச்சேனை பகுதிகளில் காட்டு யானையின் அட்டகாசத்தால் பல சேதங்கள்.

மட்டக்களப்பு, வாழைச்சேனை நகருக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று நடத்திய தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் மூவர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை வேளையில் ஊருக்குள் நுழைந்த இந்த யானை, வீதிகளில் சென்றவர்கள் மீதும் குடியிருப்புகள் மீதும் திடீர் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இதில் படுகாயமடைந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நகரப் பகுதிக்குள் யானை புகுந்ததால் பொதுமக்கள் பெரும் பீதியடைந்துள்ளனர்.

Read More
Back To Top