ஆரஞ்சு சுறா.
கோஸ்டா ரிகா நாட்டில், தேசிய பூங்கா அருகில் இந்த சுறா மீன் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரஞ்சு நிறத்தில் உள்ள இந்த சுறா அரிதானது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கோஸ்டா ரிகா நாட்டில், தேசிய பூங்கா அருகில் இந்த சுறா மீன் கண்டுபிடிக்கப்பட்டது. ஆரஞ்சு நிறத்தில் உள்ள இந்த சுறா அரிதானது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் உடல்நிலை காரணமாக இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த முடியாது என்றும் நீதிபதி அனுமதித்தால் Zoom தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றத்திற்கு ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் அறிவிப்பு. இதேவேளை நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஜனாபதி ரணிலை வைத்தியசாலை சென்று பிரதமர் பார்வையிட்டார். என்ற செய்தி பொய்யானது என பிரதம அமைச்சர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டது..
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 30ஆவது ஆண்டு நிறைவு விழா 2025 செப்டம்பர் 27ல் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் போரத்தின் 30ஆவது ஆண்டு நிறைவு விழா எதிர்வரும் 2025.09.27 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு இலக்கம் 211, ஒராபி பாஷா வீதி, மருதானை, கொழும்பு 10ல் உள்ள AMANI GRAND மண்டபத்தில்நடைபெறவுள்ளது என்பதை அறியத்தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அல்ஹம்து லில்லாஹ்! மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட…
விவசாயிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு. அரசின் வேலைத்திட்டங்களில் ஒன்றான விவசாயிகளின் மேம்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், விவசாய அமைச்சு மற்றும் உலக வங்கியின் அனுசரணையின் கீழ் குளங்கள் மற்றும் வாவிகளினுடைய புனர்நிர்மாணம் தொடர்பாக பொத்துவில் பிரதேச எல்லைக்குரிய 08 குளங்கள், அணைக்கட்டுக்களை நிர்மாணிக்கும் பணிகளைப் பார்வையிடுவதற்காக சமூக வலுவூட்டல் கிராமிய அபிவிருத்திப்பிரதியமைச்சர் வஸந்த பியதிஸ்ஸ, இலங்கை அரசியலமைப்புப்பேரவையின் உறுப்பினரும், அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேசங்களில் அபிவிருத்திக்குழுத்தலைவருமான பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா ஆகியோர் இன்று (17) ஞாயிற்றுக்கிழமை நேரடியாக…
துணிச்சல்மிக்க ஊடகத்துறைக்கு முன்மாதிரியாக விளங்கியவர் புவி ரஹ்மதுல்லாஹ். ஶ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம் வார உரைகல் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான புவி ரஹ்மதுல்லாஹ் அவர்களது மரணம் ஊடகத்துறையில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. காத்தான்குடி பிரதேசத்தை மையப்படுத்தி அவர் வெளியிட்ட “வார உரைகல்” பத்திரிகை அப்பிரதேசத்தில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியதை நாமறிவோம். ஊழல் மோசடிகளுக்கெதிராகவும் அநியாயத்தை தட்டிக் கேட்பதிலும் அவர் மிகுந்த நெஞ்சுரத்துடன் செயற்பட்டார். வயதான காலப்பகுதியில் கூட செய்திகளை சேகரித்தல்,…
அரபுக் கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்களுக்கான வான்மை விருத்திக் கருத்தரங்கு. நூருல் ஹுதா உமர் அம்பாரை மாவட்ட அரபுக் கல்லூரி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் இஸ்லாம் பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான வான்மை விருத்திக் கருத்தரங்கு முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சிச் செயல் முன்னணி மற்றும் “டயகோனியா” அமைப்புக்களின் அனுசரணையில் கல்முனை கமு /கமு/இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய ஸ்மார்ட் வகுப்பறையில் இன்றுஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சிச் செயல் முன்னணியின் திட்ட இணைப்பாளர் ஏ.ஜீ.எம். றிசாத் அவர்களின் ஏற்பாட்டிலும்,…
ஜனாதிபதி – புதிய பொலிஸ் மாஅதிபர் சந்திப்பு புதிய பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தார். புதிய பொலிஸ் மாஅதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத்தெரிவித்ததோடு, ஜனாதிபதிக்கு அவர் நினைவுப்பரிசொன்றையும் வழங்கினார். சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இலங்கை பொலிஸின் 37வது பொலிஸ்மா அதிபராவார். இலங்கை பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஆகிய மூன்று நிலைகளையும் கடந்து பொலிஸ் மாஅதிபர் பதவிக்கு தெரிவான…
ஏறாவூர் பற்று ஸகாத் கிராமத்தில் அமைந்துள்ள யூ.எல்.தாவூத் வித்தியாலய நிருவாகம் கேட்டுக் கொண்டதற்கிணங்க ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் SL.முனாப்தீன் அவர்களினால் ஒரு தொகுதி காகித பொருட்கள் செவ்வாய்கிழமை அன்று பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
மண் அகழ்வுக்கு வெட்டப்பட்ட குழியில் மூழ்கி குடும்பஸ்தர் பலி ஏறாவூர் நஸீர் (ISD) மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான், காரைக்காடு பிரதேசத்தில்சட்டவிரோத மணல் அகழ்வாளர்களினால் தோண்டப்பட்ட பாரிய பள்ளத்தாக்கில் தேங்கியிருந்த நீர் நிலையில் வலை வீசி மீன் பிடிப்பதற்காக நேற்றைய தினம் (13/08) இறங்கிய இவர், ஆழமான பகுதிக்குள் தவறுதலாக சென்றதால் அதிலிருந்து மீளமுடியாமல் காணாமற்போயுள்ளார். உறவினர்களும் பொதுமக்களுமாக இணைந்து தேடுதலில் ஈடுபட்ட போது சடலமாகவே இவரை மீட்டுள்ளனர். வேப்பவெட்டுவான் – பாலர்சேனை பிரதேசத்தைச்சேர்ந்த…