இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிதாக இணைத்து கொள்ளப்பட்டோருக்கு ஜனாதிபதியினால் நியமனங்கள் வழங்கி வைப்பு.
இலங்கை போக்குவரத்துச் சபையில் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட 199 சாரதிகளுக்கும் மற்றும் 342 நடத்துனர்களுக்குமான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் இன்று (10) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்று இருந்தார். இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் இந்நாட்டு மக்களுக்கும் இடையிலான பிணைப்பை உறுதிப்படுத்தி, ஒரு வலுவான பொதுப் போக்குவரத்துச் சேவையாக இ.போ.சபையை கட்டியெழுப்புவதற்கு இன்று நியமனம் பெற்ற அனைவரும் தமது பொறுப்புக்களைச் சரியாக நிறைவேற்றுவார்கள் என நம்பிக்கை தெரிவித்ததுடன், புதிய நியமனம் பெற்ற அனைவருக்கும் தனது…
