முன்னாள் அமைச்சர் அலி சாகிர் மௌலானா அவர்களினால் ஏறாவூர் தாமரைக்கேணி ஸாஹீர் மெளலானா வித்தியாலய அதிபர் ஏ.எல்.எம்.நெளபி அவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய விசேட செயற்திட்ட நிதியின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட Smart board மற்றும் Smart Class Room chairs என்பன பாடசாலை அதிபர் நெளபி தலைமையிலான நிருவாக குழுவினரிடம் அண்மையில் கையளிப்பு செய்யப்பட்டது.
இதன்போது முன்னாள் அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அம்ஜத் மௌலானா மற்றும் முன்னாள் அதிபர் A.C.M. சயீத் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.
MUM.முஜாஹித்
ஏறாவூர் செய்தியாளர்.


