அஸீஸா பௌன்டேசனினால் மாணவர்களுக்கு சுகாதார பொருட்கள் வழங்கி வைப்பு.

ஏறாவூர் மட்/றகுமானியா மகா வித்தியாலய பெண் மாணவிகள் 200 பேருக்கு சுகாதார பாவனை பொருட்களை கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது .

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அஸீஸா பவுன்டேசன் மாணவர்களுக்கு பொருட்களை வழங்கி இருந்தது.

மேற்படி நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர்,அஸீஸா பௌன்டேசனின் பணிப்பாளர் ஸாதீக் ஹஸன் ,ஏறாவூர் நகர சபையின் உறுப்பினர் ஏ.ஆர்.றிக்னாஸ்,ஏறாவூர் பற்று பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.எல்.முனாப்தீன் ,
பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் ,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் ,பாடசாலையின் நலன்விரும்பிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர் .

உமர் அறபாத்
ஏறாவூர் .
06/11/2025.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top