

ஏறாவூரில் ஆட்டோ கட்டணங்களை நிர்ணயம் செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது.
நகரசபையின் செயலாளரும் விஷேட ஆணையாளருமான எம்.எச்.எம்.ஹமீம் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் ஏறாவூர் மட்டுப்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி கூட்டுறவு சங்கத்தின் நிருவாகிகள் மற்றும் ஏறாவூரில் பல ஆட்டோ தரிப்பிடங்ளின் ஆட்டோ ஓட்டுநர்களும் கலந்து கொண்டனர்
இதன்போது கீழ்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1)ஆட்டோ கட்டணங்களை ஒரு வாரத்திற்குள் சரியான முறைமைக்குள் சங்கத்தின் மேற்பார்வையில் கலந்தோசித்து முடிவு செய்தல்.
2.ஏறாவூர் ஆட்டோ சங்கத்தின் கீழ் காணப்படும் 150 முச்சக்கரவண்டிகளையும் பொதுமக்கள் இலகுவாகவும் தெளிவுடனும் அறியும் வகையில் ஸ்டிக்கர் மற்றும் ஸ்பிரே வர்ணப்பூச்சு மூலம் காட்சிப்படுத்துதல்.
- ஒரு வாரத்திற்குள் தீர்மானிக்கும் ஆட்டோ கட்டண முறைமை விடயத்தை ஊர் தழுவிய ரீதியில் ஒலிபெருக்கி ஊடாக தெரிவித்தல். அத்துடன்
துண்டுப் பிரசுரம் மூலமும் பொதுமக்களுக்கு கட்டண விடயத்தை எத்தி வைத்தல்.மேலும் ஆட்டோக்களில் கட்டண விபரங்களைக் காட்சிப் படுத்தல்.
4)எதிர்காலத்தில் டெக்சி மீட்டர் பொருத்துவதற்கான வேலைத்திட்டத்தை மேற்கொள்ளுதல்.
5.நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை விட அதிக கட்டணம் அறவிடும் ஆட்டோ சாரதிகள் தொடர்பாக முறைப்பாடு செய்வதற்கு
தொலைபேசி இலக்கம் ஒன்றினை அறிமுகம் செய்தல்.
மேற்படி கலந்துரையாடல் நிகழ்வில் ஏறாவூர் நகரசபையின் வருமான பரிசோதகர் என்.வாஹித் மற்றும் ஊடகவியலாளரும் சமூக செயற்பாட்டாளருமான உமர் அறபாத் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.