ஏறாவூர்  ஜிப்ரி தைக்கா பள்ளிவாயலுக்கான புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்யும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

ஏறாவூர்  புன்னக்குடா ஜிப்ரி தைக்கா பள்ளிவாயலுக்கான புதிய நிருவாகத்தினை தெரிவு செய்யும் நிகழ்வு முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களத்தின் பணிப்பாளரின் பணிப்புரைக்கு அமைய ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் முஸ்லிம் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். ஏ.எம். அஷ்ரப் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையை தொடர்ந்து இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்,கிராம உத்தியோகத்தர் மற்றும் அகில இலங்கை ஜமியத்துல் உலமா ஏறாவூர் கிளையின் பிரதிநிதிகள் உட்பட பிரதேச மக்கள், கல்விமான்கள், உலமாக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


இடம்பெற்ற நிருவாக தெரிவின் போது ஜிப்ரி தைக்கா பள்ளிவாயலின் தலைவராக முன்னாள் அமைச்சர் செய்யித் அலிஷாஹிர் மௌலானா, செயலாளராக  எம்.ஏ. ஹமீட், பொருளாளராக சுஹைர் மௌலவி, உப செயலாளராக F.V ஜவாஹிர், உப தலைவராக எஸ்.எல்.ஏ. சித்தீக் உட்பட ஆறு நிருவாக உறுப்பினர்களும் இதன் போது தெரிவு செய்யப்பட்டனர். 

மேற்படி நிருவாக தெரிவானது அமைதியான முறையில் சுமுகமாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top