ஒலிபெருக்கி சாதனங்கள் கையளிப்பு.

ஏறாவூர் ஜயங்கேணி மஸ்ஜிதுல் ஸலாம் பள்ளிவாயலுக்கு 5 இலட்சம் பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்கள் இன்று கையளிக்கப்பட்டது.

செய்தியாளர்

உமர் அறபாத்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் றிசாட் பதியுதீன் அவர்களின் பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் ஏறாவூர் ஐயங்கேணி மஸ்ஜிதுல் சலாம் பள்ளிவாயலுக்கு 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒலிபெருக்கி சாதனங்கள் மற்றும் மின்விசிறிகள் கொள்வனவு செய்யப்பட்டன.

கொள்வனவு செய்யப்பட்ட ஒலிபெருக்கி சாதனங்கள் மற்றும் மின்விசிறிகளை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை மஸ்ஜிதுல் சலாம் பள்ளிவாயல் தலைவர் எம்.ஐ.அமீர்தீன் தலைமையில் இடம்பெற்றது .

இந்நிகழ்வில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் MSS.அமீர் அலி,கிழக்கு மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் MS.சுபைர் ஹாஜியார் கௌரவ உறுப்பினர்களான SL.முனாப்தீன்,ASM. றஸ்மி,R.றிக்னாஸ் உட்பட பள்ளிவாயல் பொருளாளர் N.வாஹீத்,அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் ,கட்சியின் முக்கியஸ்தர்கள்,
பள்ளிவாயல் நிருவாகிகள்,பிரதேச மக்கள் என பலரும் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர் .

ஒலி பெருக்கி சாதனங்கள் மற்றும் மின்விசிறிகள் போன்றவற்றினை பெற்றுக்கொள்ள கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் MS.சுபைர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top