




ஓட்டமாவடி கிட்ஸ் அகடெமியில் விதைப்பந்து பயிற்சிப்பட்டறை.
எஸ்.எம்.எம்.முர்ஷித்.
சூழலியல் நேயமிக்க எதிர்கால சந்ததிகளை உருவாக்கும் நோக்கில் விதைப்பந்து எண்ணக்கருக்களை இவ்வருடம் ஹப்பி எய்ட் சிறார்கள் மத்தியில் விதைக்கிறது.
வீட்டில் பயன்படுத்தப்பட்டு வீசப்படும் விதைகளை 5R முறையில் மீளப்பயன்படுத்துதல் எனும் தொனிப்பொருளில் விதைகளை சேகரித்து விதை பந்துகளாக்கி அழிந்த காட்டு பகுதிகளை மீள காடாக்கலாம் எனும் தலைப்பிலான கலந்துரையாடலும் விதைப்பந்து பயிற்சிப்பட்டறையும் இன்று (13) எல்லை வீதி, ஓட்டமாவடி-3ல் அமைந்துள்ள ஓட்டமாவடி கிட்ஸ் குர்ஆன் அகடெமியில் இடம்பெற்றது.
இதில் ஹப்பி எய்ட் தொண்டர் அணியினர், கிட்ஸ் குர்ஆன் அகடெமி ஆசிரியைகள், மாணவ, மாணவியரும் கலந்து கொண்டனர்.