கடற்கொள்ளையர்களின் நடவடிக்கை தொடர்பில் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்த மட்டு, அம்பாரை எம்பிக்கள்
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் வாழும் ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் கடலில் கொள்ளையிடப்படுவது தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையினை திகமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும் அம்பாறை மாவட்ட கரையோரப்பிரதேச பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்களின் தலைவருமான ஏ.ஆதம்பாவா, மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருமான கந்தசாமி பிரபு ஆகியோர் நேற்று (21/05/2025) கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், பிரதிப்பாதுகாப்பமைச்சர் மேஜர் ஜெனரல் ஓய்வுபெற்ற அருண ஜயசேகர ஆகியோரைச்சந்தித்து இது தொடர்பாக கலந்துரையாடினர்.
அத்துடன், அது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படுமென்றும் அவர்களால் உறுதியளிக்கப்பட்டது.