


ஏறாவூர் நகரசபையின் கௌரவ தவிசாளர் அல்ஹாஜ் எம்.எஸ். நழீம் அவர்கள் தனது கடமையை பொறுப்பேற்று நகரசபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஊழியர்களுடன் கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் ஏறாவூர் நகரசபையின் கௌரவ பிரதி தவிசாளர், கௌரவ உறுப்பினர்கள், நகரசபையின் செயலாளர், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், வருமானப் பரிசோதகர்கள், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.