சமாதான நீதிவானாக சத்தியப் பிரமாணம் .

சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம்

மட்டக்களப்பு ஏறாவூர் பெண் பாடசாலை வீதியை சேர்ந்த அப்துல் வாஹிட் இர்சாத் அலி மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதி மன்றத்தில் மாவட்ட நீதிவான் எச்.எம்.முஹம்மட் பஸீல் முன்னிலையில் தீவு முழுவதற்குமான சமாதான நீதிவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் பக்கீர் முகைதீன் அப்துல் வாஹிட், நாகூர் ஹாஜி சித்தி அப்பாசியா தம்பதிகளின் புதல்வர் ஆவார். மட்/மம/அல்-ஜுப்ரியா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும் மட்/மம/ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் உயர்கல்வியையும் கற்ற இவர் மட்/மம/ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளராகவும், ஏறாவூர் மஹ்ஃஹது நஜ்மல் உலூம் ஹிப்ழ் மத்ரஸாவினுடைய பொருளாளராகவும் மற்றும் ஏறாவூர் ஷுஹதாக்கள் ஞாபகார்த்தப் பேரவையின் செயலாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.

இவர் ஏறாவூர் நகர் பிரதேச செயலகம் மற்றும் காத்தான்குடி பிரதேச செயலகத்திலும் இளைஞர் சேவைகள் உத்தியோகத்தராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top