ஜனாதிபதியுடன் தேரர்கள் சந்திப்பு.

கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர், பன்னிபிட்டிய ருக்மலே ஸ்ரீ தர்ம விஜயாலோக மகா விகாராதிபதி வண, இத்தேபானே தம்மாலங்கார தேரர் மற்றும் கோட்டே ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் சிரேஷ்ட கர்மவாகாச்சார்ய வண, மாபலகம புத்தசிறி தேரரும் இன்று (09) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இதன்போது வருகை தந்த தேரர்களுடன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உரையாடலில் ஈடுபட்டார். அரசாங்க நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுக்க தேரர்கள் தனது ஆசிர்வாதங்களைகளையும் இதன்போது தெரிவித்தனர்.

செய்தி மூலம்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top