நிலாவெளியில் இடம்பெற்ற விபத்தில்
மாணிக்கநடராசா மரணம்.
திருகோணமலை -நிலாவெளி பகுதியில் இன்று (18) இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்துச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த திரியாயைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் மாணிக்கநடராசா அகால மரணமடைந்துள்ளதுடன் அவரது மனைவி பலத்த காயங்களுக்கு உள்ளாகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரது சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.