திஹாறிய அல் அஸ்ஹர் கல்லூரியில் முன்மாதிரியான பாட வகுப்பு திட்டம் .

திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியில் ESDS மூலம் வெற்றிகரமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட முற்றிலும் இலவச விஞ்ஞான பாடத்திட்டம்.
( 2nd Batch)

திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியானது மேல் மாகாணம் கம்பஹா மாவட்டில் அமையப் பெற்றுள்ள பிரபல பாடசாலைகளிள் ஒன்றாகும்.
இப்பாடசாலை சுமார் 123 வருட வரலாற்றை கொண்ட பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இன்று பல மாணவர்கள் சாதாரண தரத்தில் நல்ல பெறுப்பேற்றை பெற்று உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவை தேர்ந்தெடுக்க விரும்பினாலும், பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு வேறு துறைகளை தெரிவு செய்து வைத்தியராக வேண்டும் என்ற அவர்களது கனவை நிறுத்தி விடுகின்றார்கள். இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும்.

ஏழை மாணவர்களும் வைத்தியராக வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம் முற்றிலும் இலவசமாக, மாணவர்களுக்கு பகுதிநேர வகுப்புகள் மூலமாக நடத்தப்படுகின்றது. தற்போது 2026 ஆம் ஆண்டு மற்றும் 2027 ஆம் ஆண்டுகளில் உயர்தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களுக்காக நடத்தப்படுகின்ற குறித்த திட்டத்திற்காக மாதம் ஒன்றுக்க , 8 லட்சம் ரூபாய் செலவழிக்கப்பட்டு வருகின்றது. இதற்காக பல தனவந்தர்களும் முன்வந்து உதவிகளை வழங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும் .

குறிப்பாக இந்தத் திட்டம் திஹாறிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபர் அல்ஹாஜ் ஏ .ஜே .எம் புர்கான் அவர்களின் வழிகாட்டலில் ESDS என்ற அமைப்பின் மூலமாக நடாத்தப்பட்டு வருகின்றது. இதன் தலைவராக அல் அஸ்ஹல் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் பிரபல தொழிலதிபருமான அல்ஹாஜ் .இக்ராம் அவர்கள் மற்றும் உபதலைவராக ஜனாப். அஸ்மி ஷரப் அவர்களும் அதேபோன்று ஏனைய உறுப்பினர்களும் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் அல்ஹாஜ் ஷஹ்னீ ஆகியோர் முழுமையான பங்களிப்பை வழங்குவதும் பிரதி அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் வழங்கும் அர்ப்பணிப்புடனான சேவையும் இந்தத் திட்டம் வெற்றி அளிப்பதற்கு பிரதான காரணிகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

நன்றி…
மனாஸ் மகீன்
நிறைவேற்று பணிப்பாளர்
கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top