தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு இணைப்பு 2025 எனும் செயற்திட்டத்தின் கீழ் பிரதேச செயலக மட்டங்களில் இளைஞர் கழகங்களை அமைத்தல் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிகழ்வுளில் ஓர் அங்கமாக பயன்தரும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு 23/05/2025 இன்று ஏறாவூர் சாதுலி பள்ளிவாயல் வளாகத்தில் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் இளைஞர் சேவை உத்தியோகத்தர் AW.இர்ஷாத் அலி தலைமையில் இடம்பெற்றது .
பிரதம அதிதிதியாக பிரதேச செயலாளர் SH.முஸம்மில் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நாட்டி வைத்தார் .
மேற்படி நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் ,பள்ளிவாயல் நிருவாகத்தினர் என பலரும் பங்கேற்று இருந்தனர் .

