

ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்திற்குள் இன்று (30) பாடசாலை சென்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தேன் பூச்சிகள் துரத்தி துரத்தி குத்தியதில் 63 பேர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விளையாட்டு போட்டிகள் ஏற்பாடாகிய நிலையில் திடீரென தேன்பூச்சிகள் கலைந்து பாடசாலை, மைதானத்தில் நின்றவர்களை குத்தியுள்ளது.