பண்டைய கால வியாபார முறை.

பண்டைக்கால வணிகர்களிடம் ஒரு நல்ல வழக்கம் இருந்தது.
கடையை திறந்ததும் கடைக்கு வெளியே ஒரு நாற்காலியை வைத்து விடுவார்கள்.

முதல் வாடிக்கையாளர் வந்து வாங்கி சென்ற பின் நாற்காலியை எடுத்து உள்ளே வைத்து விடுவார்கள்.அடுத்த வாடிக்கையாளர் வந்தால் கடைக்காரர் கடையை விட்டு வெளியே வந்து கடைத்தெருவில் எந்த கடையின் முன் நாற்காலி இருக்கிறதோ அந்த கடையை காட்டி உங்களுக்கு தேவையான பொருள் அந்த கடையில் கிடைக்கும் என்று கூறி அனுப்பிவிடுவார்கள்.

சக வணிகர் இன்னும் அவரது வியாபாரத்தை துவக்க வில்லை.நான் துவங்கி விட்டேன் என்ற காரணம் தான் இது.

இதனால் தான் அவர்களது வியாபாரங்கள் வளம் கொழிந்து விளங்கின….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top