ஜனாதிபதி – புதிய பொலிஸ் மாஅதிபர் சந்திப்பு
புதிய பொலிஸ் மாஅதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தார்.
புதிய பொலிஸ் மாஅதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத்தெரிவித்ததோடு, ஜனாதிபதிக்கு அவர் நினைவுப்பரிசொன்றையும் வழங்கினார்.
சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இலங்கை பொலிஸின் 37வது பொலிஸ்மா அதிபராவார். இலங்கை பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஆகிய மூன்று நிலைகளையும் கடந்து பொலிஸ் மாஅதிபர் பதவிக்கு தெரிவான முதலாவது பொலிஸ் மாஅதிபர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
