போதை ஒழிப்பு மற்றும் இப்தார் நிகழ்வானது லெப்டினன் கேனல் DM. அனஸ் அஹமட் தலைமையில் திங்கள்கிழமை(09)அன்று ஏறாவூரில் அமையப்பெற்றுள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது .
நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரதீப் கலுபான கலந்து சிறப்பித்தார்.
ஏறாவூர் நகரசபையின் தவிசாளர் ,ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் ,நகரசபையின் உறுப்பினர்கள் ,பொலிஸ் அதிகாரிகள் ,அதிபர்கள்,உலமாக்கள்,
கல்விமான்கள்,ஆசிரியர்கள் ,அரச உத்தியோகத்தர்கள்,வர்த்தகர்கள் ,சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் மேற்படி நிகழ்வில் பங்கேற்று இருந்தனர்.


