
அப்துல் மஜீட் அவர்களுடைய இழப்பு கட்சிக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் பேரிழப்பாகும்.
அனுதாப செய்தியில் முஸ்லிம் காங்கிரஸ் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்
எம்.எஸ். நழீம்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தவிசாளரும் சிரேஷ்ட பிரதித் தலைவரும் இணைந்த வட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் மாமனிதருமான முழக்கம் அப்துல் மஜீட் அவர்களுடைய மரணச்செய்தி கேட்டு மிகுந்த கவலை அடைகின்றேன்.
அவரின் மரணமானது கட்சிக்கு பாரிய ஓர் பேரிழப்பாகும்.
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியிலே மறைந்த மாபெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களோடு இணைந்து 1987 ஆம் ஆண்டு தொடக்கம் கட்சியின் ஒவ்வொரு தேர்தல்களிலும் பாராளுமன்ற உறுப்பினர் , மாகாண சபை உறுப்பினர்களை உருவாக்குவதற்காக நாடு முழுவதும் சென்று தனது கம்பீர குரலிலே முழங்கி கட்சியின் கொள்கைகளை விளக்கி , கட்சியின் வெற்றிக்காக பாடுபட்ட நல்லதோர் கொள்கையாளர்.
முழக்கம் மஜீத் எனும் நாமம்(பட்டத்தை) மறைந்த எம் தலைவர் அஷ்ரப் சேர் வழங்கியிருந்தார்கள்.
அன்று தொடக்கம் இன்று வரை கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் சட்ட முதுமானியுமான அல்ஹாஜ்.றவூப் ஹக்கீம் அவர்களோடும் மிகுந்த நெருக்கத்தோடும் விசுவாசத்தோடும் கட்சியின் உயர்வுக்காக மர்ஹூம் அஷ்ரப் சேர் காலம் தொடக்கம் இறுதி மூச்சுவரைக்கும் பாடுபட்ட ஓர் மனிதர்.
எந்தவொரு சொந்த அபிலாஷையும் எதிர்பார்க்காமல் கட்சிக்காக வாழ்ந்து வந்தவர் முழக்கம் அப்துல் மஜீத் அவர்கள்.
இவரது இழப்பானது சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் , கட்சியின் போராளிகளுக்கும் பேரிழப்பாகும்.
அவரின் மறுமை வாழ்வுக்காக நாம் அனைவரும் பிராத்திப்பதோடு அவரின் மறைவால் வாடும் அவரின் குடும்பத்திற்கு அல்லாஹ் மன அமைதியினையும் பொறுமையினையும் வழங்க வேண்டும் என அல்லாஹ்விடத்தில் இரண்டு கரங்களும் ஏந்தி பிராத்திக்கின்றேன் என தனது அனுதாப செய்தியில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நழீம் தெரிவித்துள்ளார் .