சுனாமி 20 ஆண்டு நிறைவை முன்னிட்டு தேசிய நிகழ்வு.

தேசிய இளைஞர் சேவை மன்றமும் தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையமும் இணைந்து சுனாமி பேரனர்த்த 20வது ஆண்டு நினைவை முன்னிட்டு “அடுத்த தலைமுறைக்கு உறுதியான எதிர்காலத்தை உருவாக்குதல்” எனும் தொனிப் பொருளில் தேசிய நிகழ்வு மட்டக்களப்பு கல்லடியில் வியாழக்கிழமை அன்று நடைபெற்றது.

(M.N.M.அக்மல்-)
செய்தியாளர்.

குறித்த நிகழ்வானது தேசிய இளைஞர் சேவை மன்ற மட்டக்களப்பு மாவட்ட பணிமனையின் மாவட்ட இளைஞர் சம்மேளனத் தலைவர் G.சஜிப் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் திருமதி.நிஷாந்தி அருண்மொழி, அனர்த்த முகாமைத்துவ மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் A.M.சியாத், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் A.M.முறாக் மற்றும் மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர்களான M.சசிக்குமார்,
திருமதி.சதிஸ்வரி கிருபாகரன்,நிஸ்கோ முகாமையாளர் S.அருளானந்தம்,தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் M.I.M.றம்ஸி, இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள்,மாவட்ட சம்மேளனப் பிரதிநிதிகள்,பிரதேச சம்மேளனப் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் .

இதன் போது இளைஞர் கழக உறுப்பினர்களுக்கு அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விழிப்பூட்டல் கருத்தரங்கும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top