எமது நாட்டின் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு Connect – 2025 எனும் தொனிப் பொருளில் நாடு பூராகவும் பிரதேச செயலக மட்டத்தில் இளைஞர் கழகங்கள் புனரமைக்கப்படவுள்ளன.
அந்த வகையில் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் காத்தான்குடி Social Welfare இளைஞர் கழகத்தின் புனரமைப்புக் கூட்டம் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் AW.இர்சாத் அலி அவர்கள் தலைமையில் காத்தான்குடி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச செயலக பிரதேச செயலாளர் திருமதி. நிஹாறா மௌஜூத், நிருவாக உத்தியோகத்தர் றவூப், கிராம சேவை நிருவாக உத்தியோகத்தர் ஜரூப், புதுக்குடியிருப்பு இளைஞர் பயிற்சி நிலைய பொறுப்பதிகாரி திரு. N. குஹதாஸ், சமூக மேம்பாட்டிற்கான மக்கள் ஒன்றிய பணிப்பாளர் MIM. ஹாரிஸ், காத்தான்குடி பதில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி T.ரஜிகாந்தன், கிராம சேவை உத்தியோகத்தர் திருமதி. மபாஸா, பிரதேச இளைஞர் கழக சம்மேளன தலைவர் சுஹைல் மற்றும் இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.




