வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் விஷேட செயற்திட்டம்.

போக்குவரத்து சாலையில் ஏற்படும் விபத்துக்களை தடுக்கும் முகமாக விழிப்புணர்வு செயற்திட்டம். விஷேட வேலைத்திட்டம் . உமர் அறபாத் -ஏறாவூர் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் வீதி விபத்துக்களை தடுக்கும் முகமாக துவிச்சக்கரவண்டிகளுக்கு இரவு வேளைகளில் ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டும் வேலைத்திட்டம் செங்கலடி பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் ஏறாவூர் பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி JSA.ஜயலத் உட்பட பொலிஸ்…

Read More

ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவனினால் புதிய கண்டுபிடிப்பு.

பார்வையற்றோருக்கான அரிய சாதனத்தைக் கண்டுபிடித்த ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவன் அன்சக் அஹமட் . (SMM.முர்சித்) பார்வையற்றோர் சுமார் 1/2 மீற்றர் தூரத்திலுள்ள பாதிப்பு தரும் ஒலி எழுப்புவதனூடாக பொருளைக் கண்டறியக்கூடிய Smart Blind Stick என்ற அரிய சாதனமொன்றை ஓட்டமாவடி மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை)யில் தரம் 9E இல் கல்வி பயிலும் மாணவன் நபவி அன்சக் அஹமட் கண்டுபிடித்துள்ளார். இவர் ஓட்டமாவடி-01 ஐச்சேர்ந்த எம்.ஐ.நபவி மற்றும் மீராவோடை அமீர் அலி வித்தியாலய அபிவிருத்தி உத்தியோகத்தர்…

Read More

காரைதீவு தவிசாளருடன் சந்திப்பு .

காரைதீவு தவிசாளரை சந்தித்த மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் – பிரதேச மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்த சபை ! மாளிகைக்காடு செய்தியாளர் மாளிகைக்காடு பிரதேச மக்களின் பிரச்சினைகளை ஆராய மாளிகைக்காடு மக்களின் சார்பில் மாளிகைக்காடு தலைமை ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் நம்பிக்கையாளர்களுக்கும் காரைதீவு பிரதேச சபை தவிசாளருக்குமிடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று காரைதீவு பிரதேச சபையில் இடம்பெற்றது. மாளிகைக்காடு அந்நூர் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் செயலாளர் நூருல் ஹுதா உமரின் நெறிப்படுத்தலில் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர் ஏ….

Read More

குளத்தில் தவறி விழுந்த மாணவன் சடலமாக மீட்பு.

ஹட்டன் சிங்கமலை குளத்தில் விழுந்த மாணவனின் சடலம் மீட்பு. ஹட்டன் சிங்கமலை பகுதயில் உள்ள நீர் தேக்கத்தில் தவறி விழுந்த மாணவன் இன்று (09) நீர்தேக்கத்தில் இருந்து கடற்படையினரின் உதவியோடு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் நகருக்கு நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் 17 வயது மாணவன் நேற்று மாலை மூழ்கி காணமல் போயிருந்தார். இந்த ஆண்டு O/L பரீட்சையை முடித்துவிட்டு, முடிவுகளுக்காகக் காத்திருக்கும் 6 மாணவர்கள், கணினி வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி, ஹட்டனில்…

Read More

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு ஏர் கேர்டைன் வழங்கி வைப்பு.

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கல்குடா டைவர்ஸினால் Air Curtain கையளிப்பு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவுப்பொறுப்பாளர் தாதிய உத்தியோகத்தர் எம்.ஐ.ஏ.அஸீஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மூவ் கல்குடா டைவர்ஸ் அனர்த்த அவசர சேபைப்பிரிவினால் அவசர சிகிச்சைப்பிரிவுக்கு மிக அவசியத்தேவையாகக் காணப்பட்ட குளிரூட்டிக்குத் தேவையான Air Curtain வைத்தியசாலை அத்தியட்சகர் Dr எஃப்.பி.மதன் அவர்களிடம் நேற்று 09.07.2025ம் திகதி புதன்கிழமை கையளிக்கப்பட்டது. வைத்தியசாலை அத்தியட்சகர் Dr எஃப்.பி.மதன் தலைமையில் இடம்பெற்ற குறித்த Air Curtain கையளிக்கும் நிகழ்வில் அவசர…

Read More

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு வீதி  பவணி.

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் நாடாளவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படும் “சூழல் உணர்வுமிக்க சமூக பொறுப்புணர்வுடன் கூடிய கல்விச் சுற்றாடலை நிர்மாணித்தல்” எனும் தொனிப்பொருளில் ஏறாவூர் அல் -அஸ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலையினால் போதைப்பாவனை மூலம் ஏற்படும் தீங்குகள் மற்றும் கொடிய டெங்கு நோயின் பாதிப்புக்களை வெளிப்படுத்தும் வீதி விழிப்புணர்வு பவணி மாணவிகளினால் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய தினம் பாடசாலையின் அதிபர் SMM.நவாஸ் தலைமையின் கீழ் பாடசாலை வளாகம் மற்றும் வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டதுடன் “சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம்…

Read More

ஸ்ரீ விக்னேஸ்வரா பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபவணி

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் எண்பதாவது (80) ஆண்டு நிறைவை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபவனி கடந்த சனிக்கிழமை (05) இடம்பெற்றது. ஆரம்ப நிகழ்வாக பாடசாலைக் கொடியேற்றம்,பாடசாலைக் கீதம் இசைத்தல்,அமுதவிழா கவி இசைத்தல்,மத குருமார் ஆசியுரை ஆகியன நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நடைபவனி பாடசாலை முன்றலிலிருந்து ஆரம்பமாகி, தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரியியைச் சென்றடைந்து அங்கிருந்து ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் வித்தியாலயம் வரை சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது. இதில்…

Read More

கிழக்கு ஆளுநர் வாழைச்சேனை வைத்தியசாலைக்கு இன்று விஜயம் .

கிழக்கு ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு விஜயம் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர இன்று (08) வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவின் அழைப்பின் பேரில் விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன் போது வைத்தியசாலையின் குறைபாடுகள் குறித்து வைத்திய அத்தியட்சகர் Dr FP.மதன் மற்றும் அபிவிருத்திக்குழுவின் உப தலைவர் மெளலவி MMS.ஹாறூன் ஸஹ்வி ஆகியோரினால் ஆளுனருக்கு விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr R.முரளீஸ்வரன் உட்பட வைத்திய அதிகாரிகள், அபிவிருத்திக்குழு…

Read More

புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான விழிப்புணர்வு மற்றும் சிகிச்சைகளுக்காக, போதனா வைத்தியசாலையுடன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை இணைந்து செயற்படவிருக்கின்றது – Dr. ஆர். முரளீஸ்வரன் மட்டக்களப்பு பிராந்தியத்தில் புற்றுநோயை கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நடந்த கலந்துரையாடலினை தலைமைதாங்கிய பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr. R. முரளீஸ்வரன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். 07.07.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று பணிமனையின் மகாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலை, தொற்றா நோய்த் தடுப்புப் பிரிவின்…

Read More

பதில் அதிபருக்கு பாடசாலை சமூகம் வாழ்த்து.

ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலயத்தின் பதில் அதிபராக கடமையேற்றிருக்கும் ரீ.எல்.எம்.சக்கி ஆசிரியருக்கு பாடசாலைச்சமூகம் வாழ்த்து 2018.09.17 அன்று முதல் ரிதிதென்ன இக்ராஹ் வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றி 2025.07.04ம் திகதி முதல் பதில் அதிபராகக் கடமையேற்றிருக்கும் ரீ.எல்.ஏ.சக்கி ஆசிரியருக்கு பாடசாலைச்சமூகம் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றது. இவர் பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் உறுதுணையாக விளங்கி வருவதுடன், பாடசாலை அபிவிருத்திச்சங்கப் பொருளாளராக, ஒழுக்கக்கட்டுப்பாட்டு குழுத்தலைவராக, ஆசிரியர் நலன்புரிச்சங்கத்தலைவராகவும் பல பதவிகளை வகித்து சிறப்பாக பணியாற்றி வருகின்றார். மாணவர்களின் நலன், பாடசாலையின் கல்வி வளர்ச்சி,…

Read More
Back To Top