முன்பள்ளி பாலர் பாடசாலையின் விடுகை விழா.

அல்-குறைஷ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேற்று நிகழ்வு.!!! (எஸ். சினீஸ் கான்) பிறைந்துரைச்சேனை அல்-குறைஷ் முன்பள்ளி பாலர் பாடசாலையின் 24வது மாணவர் வெளியேற்று நிகழ்வு அஸ்ஹர் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (24) நடை பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், பாராளுமன்ற உறுப்பினர் பொறியியலாளர் எம்.எஸ். நழீம் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்குடா தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி ஹபீப்…

Read More

நத்தார் தின வாழ்த்து .

மானிட சமூகத்திற்கு அன்பையும்,சமாதானத்தையும் போதிக்கும் அடையாளமாக கிறிஸ்மஸ் பண்டிகை உள்ளது! -இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கிறிஸ்மஸ் வாழ்த்து- இயேசு கிறிஸ்துவின் பிறப்புடன் தொடர்புடைய நத்தார் பண்டிகையானது, இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்களால் மாத்திரமன்றி முழு மானிட சமூகத்துக்கிடையில் பிரிக்க முடியாத தொடர்புகளைப் பலப்படுத்துகின்ற மகிழ்ச்சிகரமான ஒரு நன்நாளாகுமென இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் கிறிஸ்மஸ் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், சமூகத்தின் நல்வாழ்வைப் போன்று, பாவத்தின் இருளை அகற்றுவதே…

Read More

ஏறாவூர் தாருஸ்ஸலாம் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஏறாவூர் தாருஸ்ஸலாம் கிளையின் ஏற்பாட்டில் பாராளுமன்றத்திற்கு தெரிவான மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நழீம் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஏறாவூர் நகரசபையின் முன்னாள் உறுப்பினரும் இமாம் ஹஸ்ஸாலி பவுண்டேஷன் அமைப்பின் தலைவருமான ஏ.ஆர். பிரௌஸ் தலைமையில் இன்று செவ்வாய்க்கிழமை தாருஸ்ஸலாம் காரியாலயத்தில் இடம் பெற்றது இந்நிகழ்வில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், வட்டார வேட்பாளர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், கட்சியின் மூத்த போராளிகள், ஆதரவாளர்கள்,…

Read More

சேதமடைந்த வீதிகளை புனரமைப்பு செய்யும் பணிகளை விரைவுபடுத்துங்கள்- கலாநிதி MLAM ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை.. காத்தான்குடி நகரசபைக்கு உட்பட்ட அனர்த்தத்தினால் சேதமடைந்து காணப்படும் அனைத்து வீதிகளையும் விரைவாக புனரமைப்பு செய்யுமாறு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் கே.சிவகுமார் அவர்களிடம் இன்று (23) கோரிக்கை விடுத்தார். இது தொடர்பான கூட்டம் காத்தான்குடிநகரசபை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின்…

Read More

காத்தான்குடி பிரதான தெரு விளக்குகளை உடனடியாக ஒளிரச் செய்யுங்கள் .

காத்தான்குடி பிரதான வீதி தெரு விளக்குகளை உடனடியாக ஒளிரச்செய்யுங்கள்- MLAM ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை.!! காத்தான்குடி பிரதான வீதி தெரு விளக்குகள் ஒளிராமை தொடர்பில் சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டதுடன் பல் வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து தெரு விளக்குகளை ஒளிரச்செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நகரசபை செயலாளரிடம் கோரிக்கையொன்றை முன்வைத்தார். இன்று திங்கட்கிழமை (23) காத்தான்குடி நகரசபையில் இடம் பெற்ற கூட்டத்திலே இவ்வாறு கோரிக்கைவிடுத்தார். இக்கூட்டத்தில் முன்னாள் நகரசபை…

Read More

ஏறாவூர் அல் ஹிரா பாலர் பாடசாலையின் விடுகை விழா.

அல் -ஹிரா பாலர் பாடசாலையின் விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்… (உமர் அறபாத் -ஏறாவூர்) ஏறாவூர் மிச்நகர் அல் ஹிரா பாலர் பாடசாலையின் விடுகை விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று சனிக்கிழமை பாலர் பாடசாலையின் அதிபர் ஓய்வுபெற்ற கோட்டக்கல்வி அதிகாரி SA.றசாக் தலைமையில் மிச்நகர் இல்மா வித்தியாலய பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது . இந்நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நழீம் கலந்து சிறப்பித்தார். கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின்…

Read More

ஏறாவூர் நகரசபை உத்தியோகத்தர்கள் நலன்புரி சங்கத்தின் வருடாந்த ஒன்றுகூடல் இன்று இடம்பெற்றது .

ஏறாவூர் நகரசபை உத்தியோகத்தர்கள் நலன்புரி சங்கத்தின் வருடாந்த ஒன்று கூடல் இன்று (21) சனிக்கிழமை கரடியனாறு விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடை பெற்றது எம்.எஸ்.எம். றசீன் நலன்புரி சங்கத்தின் தலைவரும் நகரசபையின் செயலாளருமாகிய ஜனாப் எம்.எச்.எம் ஹமீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் நகரசபையில் கடமையாற்றி இடமாற்றம் மற்றும் ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டனர். கல்வி, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளில் தேசிய மட்ட பெறுபேறுகளைப் பெற்று சாதனைகளை நிலைநாட்டிய சபை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளும் இவ்வைபவத்தில் பணப்பரிசு வழங்கி…

Read More

ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு இரண்டுமாடி கட்டிடம்.

ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு இரண்டு மாடி கட்டிடம். (ஏறாவூர் செய்தியாளர்ஐ.எம். அம்ஜத்) ஏறாவூர் மீராகேனி பிரதேசத்தில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்திற்கு இரண்டு மாடி கட்டிட தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு சிரேஷ்ட சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம். அலியார் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதமர் அதிதியாக ஓட்டமாவடி கோரளைப்பற்று மேற்கு, உதவி பிரதேச செயலாளர் எம்.ஆர். சியாஹூல் ஹக் கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதிகளாக ஏறாவூர் சுகாதார வைத்திய பணிமனையின்…

Read More

போதைப் பொருளுடன் ஒருவர் கைது.

நிந்தவூரில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது! சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ் அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் 23 பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை (20) அதிகாலை 01.30 மணியளவில் சம்மாந்துறை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். சம்மாந்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய நபரே…

Read More
Back To Top