காத்தான்குடி பிரதான வீதியில் விபத்து .

அதிகாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதுண்டு பயணிகள் பஸ் விபத்து

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி மட்டக்களப்பு வழியே பயணித்த பேரூந்து இன்று (21) அதிகாலை காத்தான்குடி நகரில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து தொடர்பில் தெரிய வருவதாவது, கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கிப்பயணித்த பேரூந்தானது வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பேரூந்தின் பின்னால் பயணித்த முச்சகர வண்டியும் சிக்கியுள்ளது

விபத்தின் போது முச்சக்கர வண்டி மற்றும் சொகுசு பேரூந்தின் முன் பகுதி என்பன பாரிய சேதத்திற்குள்ளாகியுள்ளது.

இதன் போது, பயணிகள் எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதிலும், பேரூந்தின் சாரதி, நடத்துனர் மற்றும் முச்சக்கர வண்டிச்சாரதி ஆகியோர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். கடோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top