காரைதீவு மாவடிப்பள்ளி அனர்த்தத்தில் உயிரிழந்த மத்ரசா மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசினால் நிதியுதவி .

மாவடிப்பள்ளி அனர்த்ததில் உயிரிழந்த மத்ரஸா மாணவர்களின் குடும்பங்களுக்கு அரசினால் நிதி உதவி.

(சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ் )

காரைதீவு – மாவடிப்பள்ளி வீதியில் உள்ள பாலத்தில் வெள்ள அனர்த்ததினால் உயிரிழந்த ஆறு மத்ரஸா மாணவர்களின் குடும்பங்கள் உட்பட மற்றும் மரணித்த இரண்டு குடும்பங்களுக்கு அரசினால் வழங்கப்பட்ட நிதியினை திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.ஆதம்பாவா வழங்கி வைத்தார்.

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நேற்று (11) இடம்பெற்ற இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், கணக்காளர், செயலாளர்கள்,
சம்மாந்துறை பிரதேச செயலாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back To Top