






வரலாற்று நிகழ்வில் தடம் பதித்தது ஏறாவூர் அல் அமான் வித்தியாலயம்
2024 ஆம் ஆண்டிற்கான ஆங்கில மொழி விழா நேற்று புதன்கிழமை (11) ஏறாவூர் அல் அமான் வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.எம். அமீர் தலைமையில் இடம்பெற்றது.
பாடசாலையில் கல்வி கற்கும் மாணவ மாணவிகளுக்கு ஆங்கில மொழியை ஊக்குவித்து அதனை மேம்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் கல்வி அபிவிருத்திக்கான பிரதி கல்வி பணிப்பாளர் டீ.எம். செய்த் அஹமட் கலந்து கொண்டிருந்தார்.
கெளரவ அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயத்தின் ஆங்கிலப் பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.வை. நஜிமுதீன் மற்றும் இமாம் ஹஸ்ஸாலி பௌன்டேசன் ஸ்தாபகரும் முன்னால் ஏறாவூர் நகர சபையின் கெளரவ உறுப்பினருமான ஏ.ஆர். பிரௌஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
சிறப்பு அதிதிகளாக ஓய்வு பெற்ற ஆங்கில பாட ஆசிரியர்களான எம்.எஸ். அப்துல் ஹை, எஸ். அஹமட் லெப்பை, மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலையின் ஆங்கில பாட ஆசிரியர் எம்.எம்.எம். ஜெசில் , ஏறாவூர் பஷீர் சேகுதாவூத் வித்தியாலயத்தின் அதிபர் ஏ.சி.எம். அஜ்மல்கான் , மட்டக்களப்பு மத்தி வலயத்தின் கணிதப்பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகர் ஏ.எல்.எம். ஷில்மி , பிரபல தொழிலதிபர் ஏ. சத்தார் , ஹலீமா அரிசி ஆலைய உரிமையாளர் ஏ. ரமீஸ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
மாணவர்களினால் ஆங்கில மொழியை அடிப்படையாக கொண்ட பல நிகழ்ச்சிகள் மேடையில் அரங்கேற்றப்பட்டன.
மேற்படி நிகழ்வில் மாணவ மாணவிகளின் கலைநிகழ்வுகள் அதிதிகளின் வரவேற்பை பெற்றதுடன் பாரட்டத்தக்கதாகவும் அமைந்திருந்தது.
அத்துடன் பயிற்றுவிப்பாளர்களான சமீஹா ஹுசைன் , என்.எப். நஸீஹா ஆசிரியர்கள் பிரதம அதிதியால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
பலமை வாய்ந்த இப்பாடசாலையின் முதல் முறையாக நடைபெற்ற ஆங்கில மொழிவிழா நிகழ்வினை பார்வையிட அதிகளவான பெற்றோர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்