

ஏறாவூர் மிச்நகர் மட்/இல்மா வித்தியாலய சமூகம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க பாடசாலை வளாகத்தில் வெள்ளநீர் தேங்கி நிற்கும் இடங்களுக்கு மண் போடும் வேலைத்திட்டம் இன்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
ஏறாவூர் பற்று பிரதேச சபையின் மிச்நகர் வட்டார கௌரவ உறுப்பினர் MH. சபூர்தீன் ஹாஜியார் அவர்களின் துரித முயற்சியின் ஊடாக சபையினால் பாடசாலைக்கு 25 லோட் மண் இன்று கொட்டப்பட்டு பிரதேச சபை JCB இயந்திர உதவியுடன் செப்பனிடும் பணிகளும் இடம்பெற்றன.
இதன்போது ஐயங்கேணி வட்டார கௌரவ உறுப்பினர் MSM.ஜவ்பர்,மட் /இல்மா வித்தியாலய அதிபர் HL.முஹாஜிர் ,மிச்நகர் சனசமூக நிலையத்தின் உபதலைவர் உமர் அறபாத் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர் .
