ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு இரண்டு மாடி கட்டிடம்.
(ஏறாவூர் செய்தியாளர்
ஐ.எம். அம்ஜத்)
ஏறாவூர் மீராகேனி பிரதேசத்தில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்திற்கு இரண்டு மாடி கட்டிட தொகுதிக்கான அடிக்கல் நடும் நிகழ்வு சிரேஷ்ட சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.எம். அலியார் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதமர் அதிதியாக ஓட்டமாவடி கோரளைப்பற்று மேற்கு, உதவி பிரதேச செயலாளர் எம்.ஆர். சியாஹூல் ஹக் கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ அதிதிகளாக ஏறாவூர் சுகாதார வைத்திய பணிமனையின் சுகாதார வைத்திய அதிகாரி Dr. ஸாபிரா வஸீம், ISRC சிறீலங்கா நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ஏ.எல். ஜுனைட் நளீமி கலந்து சிறப்பித்ததுடன் ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் நிர்வாகிகள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், கல்விமான்கள், உலமாக்கள், பிரதேச நலன் விரும்பிகள், பராமரிப்பிற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் பிள்ளைகளின் உறவினர்கள் என பலரும் மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ISRC சிறிலங்கா நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் ஏ.எல். ஜுனைட் நளீமி ஊடாகவே இவ் இரண்டு மாடி கட்டிடமும் கிடைக்கப்பெற்றதுடன், ISRC சிறிலங்கா நிறுவனத்தின் ஊடாக இதற்கு முன்னர் ஏறாவூர் சிறுவர் பராமரிப்பு நிலையத்திற்கு பல்வேறுபட்ட உதவிகள் மற்றும் கட்டடங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

